India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு <

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <

மெய்ஞானபுரம் அருகே கல்விளை பகுதியை சேர்ந்த கோமதி என்பவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிலிருந்த 2 ஆடுகள் திருடு போனது. இது குறித்து அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் வாலிபர்கள் சிலர் சொகுசு காரில் ஆடுகளை கடத்தி சென்றதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட சங்கர் (20) என்பவரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே வீரராகவுபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை வாசன். தனியார் விடுதி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவருக்கும், இவரது எதிர்வீட்டைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவருக்கும் மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் இசக்கிராஜா கத்தியால் ஏழுமலை வாசனின் கழுத்தில் குத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT

முறப்பநாடு போலீசார் நேற்று மணக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பார்வதி நாதன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் மிகப்பெரிய அரிவாள் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குலசை காவல்ஆய்வாளர் பிரபு பாஸ்கர் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கல்லாமொழி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த 13 நபர்கள் சேர்ந்து சட்டவிரோதமாக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து. 13 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 3,67,000 ரொக்கம், சீட்டுக் கட்டுகள் மற்றும் 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தார்.
Sorry, no posts matched your criteria.