Tuticorin

News January 18, 2026

தூத்துக்குடி: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 17, 2026

தூத்துக்குடி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

தூத்துக்குடி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News January 17, 2026

தூத்துக்குடி: தாசில்தார் எண்கள்.. SAVE பண்ணுங்க.!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாசில்தார் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ளது.
1.தூத்துக்குடி-0461-2321448
2.ஸ்ரீவைகுண்டம்-04630-255229
3.திருச்செந்தூர்-04639-242229
4.சாத்தான்குளம்-04639-266235
5.கோவில்பட்டி-04632-220272
6.ஓட்டப்பிடாரம்-0461-2366233
7.எட்டயபுரம்-04632-271300
8.விளாத்திகுளம்-04638-233126
9.ஏரல்-04630-270055. SHARE பண்ணுங்க.

News January 17, 2026

தூத்துக்குடி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

தூத்துக்குடி மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கு SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க

News January 17, 2026

தூத்துக்குடி: கல்லூரி மாணவர் மர்ம மரணம்

image

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் காட்டுப் பகுதியில் இளைஞர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் விசாரித்ததில், அந்த நபர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் அருண்குமார் (19) என் தெரிய வந்தது. மாணவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

News January 17, 2026

தூத்துக்குடி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

தூத்துக்குடி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 17, 2026

தூத்துக்குடி: இளைஞர் சரமாரியாக குத்தி கொலை

image

திருச்செந்தூர் பகுதியில் ஏழுமலை வாசன் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் இசக்கி ராஜா (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் ஒரே மின்இணைப்பு என்பதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இசக்கி ராஜா, ஏழுமலை வாசனை நேற்று கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ஏழுமலை வாசன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருச்செந்தூர் போலீசார் இசக்கி ராஜாவை கைது செய்தனர்.

News January 17, 2026

தூத்துக்குடி: லாரி மீது மோதி இருவர் பரிதாப பலி

image

தூத்துக்குடி வாகைகுளம் டோல்கேட் அருகே நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து வந்த லோடு வாகனம் ஒன்று பூக்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டு இருந்தது. அப்போது தூத்துக்குடி செல்லும் வழியில் நான்கு வழி சாலையில் சாலை ஓரத்தில் நின்ற லாரியின் பின்பக்கத்தில் அந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் வந்த தனுஷ் மற்றும் கிளீனர் மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

தூத்துக்குடி: உங்க நீதிமன்ற CASE பற்றி ஈசியா தெரிஞ்சிக்கலாம்…

image

தூத்துக்குடி மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்களாகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT

News January 17, 2026

தூத்துக்குடி: தொழிலாளி அடித்துக் கொலை

image

சாயர்புரம் அருகே கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் வில்லியம் என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். அங்கு அவருடன் வேலைபார்த்து வந்த சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வில்லியம்மை சுப்பிரமணியன் அடித்து கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டிவைத்துள்ளார். இத்தகவல் அறிந்த போலீசார் சுப்பிரமணியனை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!