India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மாரியப்பன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இனி தெருவில் நடந்து சென்றோ தள்ளுவண்டியில் சென்றோ விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு பதிவு கட்டணம் ரூ.100 ரத்து செய்யப்படுகிறது. ஆனால் அவர்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் பதிவு சான்றிதழ் பெற்று நகல் வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகின்றது. அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை(9.11.2024) காலை 8.30 கனமழை முதல் மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க டி ஃபார்ம் பி ஃபார்ம் மற்றும் அவர்கள் அனுமதி பெற்ற நபர்கள் தகுதி சான்றிதழ் உடன் வரும் 20ம் தேதிக்குள் www.mudhalvarmarundhagam என்ற இணையதள முகவரிக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் துவங்கி நடைபெற்று வந்தது. இதன் சிகர நிகழ்ச்சி ஆன சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாட்டவர் என பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியின் கழுகு பார்வை புகைப்படம் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ07) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படையில் சேர்வதற்கு இலவச வழிகாட்டுதல் பயிற்சி கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவ கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும், இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடலோர காவல் நிலையங்கள் மற்றும் மீனவர் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்” என கடலோர பாதுகாப்பு குழும செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு அரசு உதவித்தொகை கல்வி அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட பழங்குடியினருக்கு 45 வயது வரையிலும் மற்றவர்களுக்கு 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும். தகுதியுடையவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று பகல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது விமானத்தில் பயணம் செய்த தம்பதிகள் ஒருவரின் குழந்தை விமானம் டேக் அப் ஆனதும் அழத் துவங்கியது. இதனைக் கண்ட அமைச்சர் கீதா ஜீவன் குழந்தையை வாங்கி தாலாட்டு பாடி அழுகையை நிறுத்த முயன்ற சம்பவம் அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
துணை முதல்வர் ஆன பின் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.13 மற்றும் 14ஆம் தேதிகளில் வருகை தந்து சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். நவ.13-ஆம் தேதி மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி வரும் அவருக்கு புதூர் எல்லையில் வைத்து வடக்கு மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்ததும் இன்று திருச்செந்தூரிலிருந்து செல்லும் ரயில்கள் விவரம் – திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி மாலை 6:15, திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரவு 8:25க்கு, திருச்செந்தூரிலிருந்து நெல்லை சிறப்பு ரயில் இரவு 8:50, திருச்செந்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் இரவு 10:25க்கு செல்லும்.
Sorry, no posts matched your criteria.