Tuticorin

News November 24, 2024

வாக்காளர் முகாம் புதிய வாக்காளர் ஆர்வம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16, 17 நடைபெற்ற வாக்காளர் முகாமில் 18 ,19 வயதினர் 6,353 பேரும் 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,201 பேரும் என 11,554 பேரும். நேற்று, இன்று நடைபெற்ற முகாமில் 18, 19க்கு வயதுக்கு உட்பட்டவர்கள் 5,160 பேரும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,360 பேரும் மொத்தம் 10,520 பேரும் வாக்காளர் பட்டியலில் தங்களைஇணைத்துக் கொண்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News November 24, 2024

தூத்துக்குடியில் நாளை தொடங்குகிறது நேர்முகத் தேர்வு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் காலி பணியிடத்திற்கான நேர்முகத்தேர்வு நாளை தொடங்குகிறது. தூத்துக்குடியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் வைத்து நடைபெறும் இந்த நேர்முகத் தேர்வில் விற்பனையாளராக 72 பேரும், கட்டுனர் 10 பேரும் தேர்வு செய்யப்படும். இந்த நேர்முகத் தேர்வு 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

News November 24, 2024

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசிகளை சிலர் வாங்கி அதை பதுக்கி வைத்து அரிசி கடத்துபவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது. இவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் ரேஷன் அட்டை பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.

News November 24, 2024

வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் ஆட்சியர் ஆய்வு

image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியில் இன்று(நவ.24) நடைபெற்று வரும் வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை முகாமில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு முகவரி மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த பொது மக்களிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார். அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News November 24, 2024

திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்

image

திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் சமூக நலத்துறை சார்பில் சென்னையில் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட திருநங்கைகள் நாளை(நவ.25) க்குள் தூத்துக்குடி சமூக நல துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்

News November 24, 2024

தூத்துக்குடி ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ23) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News November 24, 2024

கழிவு மீன் ஆலையை மூட நாளை போராட்டம்

image

ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் 3 மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி கிராம மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலையை இழுத்து மூடவும், ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும் கூறி நாளை தூத்துக்குடியில் ஆலைக்கு எதிரான போராட்டக் குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News November 23, 2024

திருச்செந்தூரில் பலியானோருக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர்

image

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறிவினர் சிசுபாலன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். தற்போது, உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

News November 23, 2024

திருச்செந்தூரில் சிபிஎம் 11வது மாவட்ட மாநாடு

image

திருச்செந்தூரில் மார்க்சிஸ்ட் தமிழில் கட்சியின் 11வது மாவட்ட மாநாடு இன்று(நவ.,23) தொடங்கியுள்ளது. மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அரசியல் சாசன அறிக்கை வாசித்தல் மற்றும் புதிய மாவட்ட குழு தேர்ந்தெடுத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது. மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

News November 23, 2024

முதியோர், குழந்தைகள் இல்லங்களுக்கு கலெக்டர் உத்தரவு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள், முதியோர், குழந்தைகள், மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் இல்லங்கள் அரசால் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாத இல்லங்களுக்கு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி பெறாத இல்லங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!