India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்த போது விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்த போது விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தூத்துக்குடி மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <

தூத்துக்குடி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நிலக்கடலை விலை உயர்வைத் தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் மிட்டாய் விலையை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவரை கிலோ ரூ.200 முதல் ரூ.260 வரை விற்பனையான நிலையில், இப்போது ரூ.260-க்கு விற்கப்படுகிறது. இன்று முதல் புதிய விலை அமலுக்கு வந்தது. விலை உயர்வால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்க

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புவிசார் குறியீடு பெற்ற கடலை மிட்டாய் தயாரிப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் கடலை பருப்புகள் விளைச்சல் குறைந்ததாலும், விலை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்ந்ததால் உற்பத்தியாளர்கள் கடலை மிட்டாய் விலையை 40% வரை உயர்த்துவதாக கோவில்பட்டியில் இன்று (ஜன.28) நடைபெற்ற சங்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி விக்டோரியா தெருவைச் சேர்ந்த ஜூடு பிரீஸ் (53) பழைய துறைமுகத்தில் தோணியில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மத்திய பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த நிலையில் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
Sorry, no posts matched your criteria.