Tuticorin

News December 7, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச06) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News December 6, 2024

தூத்துக்குடியில் ரூ.52 இலட்சம் சைபர் மோசடி

image

தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் டிரேடிங் மூலம் பணம் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற தகவலை எடுத்து அவர் fht என்ற செயலியை நிறுவி அதன் மூலம் ரூபாய் 52,11,132 முதலீடு செய்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் செய்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்து கேரளா மலப்புரத்தைச் சேர்ந்த அஜமல் என்பவரை கைது செய்தனர்.

News December 6, 2024

மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக்குழு கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஊரக வளர்ச்சி உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா உள்பட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News December 6, 2024

தூத்துக்குடியில் குடிநீருடன் கழிவு நீர்; சிபிஎம் கண்டனம்

image

தூத்துக்குடி மாநகராட்சி கணேசன் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக சிபிஎம் சார்பில் மாநகராட்சியில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் குடிநீரில் கழிவுநீர் கலப்பது சரி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் குடிநீருடன் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகின்றது. இதற்கு சிபிஎம் நகரச் செயலாளர் முத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

News December 6, 2024

தூத்துக்குடியில் டிச.,18 முதல் ‘தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்’

image

தமிழ் ஆட்சி மொழி சட்டம் கடந்த 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதனை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரும் 18 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் ‘தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்’ கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News December 6, 2024

குலசையில் ராக்கெட் ஏவுதளம்: விவரம் வெளியிட கோரிக்கை?

image

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு மாதவன் குருச்சியில் சுமார் 1500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆதியாகுறிச்சி பஞ்சாயத்தில் 1,000 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே ஏவுதள பணிக்கு எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்பதை தெரிவிக்க விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News December 6, 2024

ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

image

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் கிடங்குகளை பார்வையிட்டு திரவ உயிர் உரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கினார். நெல் சாகுபடி பணிகளை பணிகளை, வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ் உடன் சென்று ஆய்வு செய்து தேவையான அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.

News December 6, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் 

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.

News December 5, 2024

ஆதிதிராவிட விடுதி காப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று ஆதிதிராவிட நல விடுதிகளின் காப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விடுதிகளின் தற்போதைய நிலை, விடுதி மாணவர்கள் தேவைகள் போன்றவை பற்றி கேட்டறியப்பட்டன. இதில் விடுதி காப்பாளர்கள் பங்கேற்றனர்.

News December 5, 2024

தொழிலாளர்களுக்கு இருக்கை வசதிகள்- ஆட்சியர் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணி செய்யும் நிறுவனம் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை ஆணையம் ஏற்கனவே தெரிவித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் கடைகள் நிறுவனங்களில் இத்தகைய முரண்பாடுகள் காணப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரின் இன்றைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!