Tuticorin

News December 7, 2024

விவசாயிகள் மீது தாக்குதல்: கனிமொழி எம்பி கண்டனம்

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று(டிச.,7) தனது முகநூல் பக்கத்தில், பயிர்களுக்கு MSP-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உட்பட, தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக டெல்லிக்கு பேரணியாக செல்லும் விவசாயிகள் மீது மத்திய அரசின் இரக்கமற்ற மற்றும் மனிதாபிமானமற்ற பலாத்காரத்தை பயன்படுத்துவதை நான் கண்டிக்கிறேன். தேசத்திற்கு உணவளிப்பவர்களை லத்தி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளால் தாக்குவது மூர்க்கத்தனமானது என்றுள்ளார்.

News December 7, 2024

காச நோய் விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைப்பு

image

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று காசநோய் ஒழிப்பு திட்டத்தினை ஒட்டி காசநோய் இல்லாத தமிழ்நாடு என்ற 100 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 7, 2024

தூத்துக்குடி; பினாயில், ஆசிட் கலந்து குடித்து பெண் தற்கொலை

image

தூத்துக்குடி மகிழ்ச்சி புரத்தை சேர்ந்தவர் வள்ளி (50). கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்தார் இவர், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நேற்று(டிச.,6) பகல் சில்வர்புரம் சாலை அருகே பினாயிலையும் ஆசிட்டையும் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2024

பினாயில் ஆசிட் கலந்து குடித்து பெண் தற்கொலை

image

தூத்துக்குடி மகிழ்ச்சி புரத்தை சேர்ந்தவர் வள்ளி (50), கணவனை இழந்த இவர் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நேற்று பகல் சில்வர்புரம் சாலை அருகே பினாயிலையும் ஆசிட்டையும் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2024

எம்பி, அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வல்லநாடு பகுதிகளில் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நாளை (07-12-2024) பல்வேறு நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்த நிகழ்ச்சி விபர பட்டியலை இன்று (டிச.6) தூத்துக்குடி திமுக கழக அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News December 7, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச06) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News December 6, 2024

தூத்துக்குடியில் ரூ.52 இலட்சம் சைபர் மோசடி

image

தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் டிரேடிங் மூலம் பணம் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற தகவலை எடுத்து அவர் fht என்ற செயலியை நிறுவி அதன் மூலம் ரூபாய் 52,11,132 முதலீடு செய்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் செய்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்து கேரளா மலப்புரத்தைச் சேர்ந்த அஜமல் என்பவரை கைது செய்தனர்.

News December 6, 2024

மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக்குழு கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஊரக வளர்ச்சி உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா உள்பட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News December 6, 2024

தூத்துக்குடியில் குடிநீருடன் கழிவு நீர்; சிபிஎம் கண்டனம்

image

தூத்துக்குடி மாநகராட்சி கணேசன் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக சிபிஎம் சார்பில் மாநகராட்சியில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் குடிநீரில் கழிவுநீர் கலப்பது சரி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் குடிநீருடன் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகின்றது. இதற்கு சிபிஎம் நகரச் செயலாளர் முத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

News December 6, 2024

தூத்துக்குடியில் டிச.,18 முதல் ‘தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்’

image

தமிழ் ஆட்சி மொழி சட்டம் கடந்த 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதனை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரும் 18 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் ‘தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்’ கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!