Tiruvannamalai

News October 24, 2024

108 அடியை எட்டிய சாத்தனூர் அணை

image

கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 2430 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 119 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 108 அடி நீர் நிரம்பியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 8 அடி நீர் நிரம்பி உள்ளதாக மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 24, 2024

தி.மலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளை (24-10-2024) 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 23, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

தண்டராம்பட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

image

திருவண்ணாமலை விஜிலன்ஸ் டிஎஸ்பி வேல் முருகன் மற்றும் காவல் ஆய்வாளர் அருள் பிரசாத் தலைமையில் தண்டராம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது. அலுவலகத்தில் ஆங்காங்கே இருந்த பணம் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோரை விசாரணை செய்து, சார் பதிவாளர் கதிரேசன் மற்றும் அலுவலர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. உடன் விஜிலென்ஸ் உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீசார் உள்ளனர்.

News October 23, 2024

ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ஆம் ஆண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (23.10.2024) நடைபெற்றது. இதில், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 23, 2024

கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசு

image

2024 – 25ஆம் ஆண்டுக்கான பாரதியார் மற்றும் குடியரசு தின விழா போட்டிகளில் தி.மலை வருவாய் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் இறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று திருச்சியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளனர். வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசகிரிவாசன் பாராட்டினார்.

News October 23, 2024

 புவியியல் & சுரங்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் இயற்கை வளங்கள் துறை செயலாளர் கே. பனீந்திர ரெட்டி தலைமையிலும், தி.மலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 23, 2024

சிட்கோ தொழிற்பேடையில் தொழில்மனை அமைக்க வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகோளாப்பாடி பகுதியில் அமைந்துள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் 103 காலி தொழில்மனைகளை சிறு, குறு தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் தொடங்க விரும்புவோர் http://www.tansidco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது 9445006558 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

News October 23, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொது மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமைப் பயன்படுத்தி பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 04175 – 233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (22.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!