India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், திரையரங்குகளில் பலர் புதுப்படங்களை கண்டு ரசித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதில், உங்களை மகிழ்வித்தது எது?
மங்கலம் அடுத்த வி.பி.குப்பம் கிராமத்தில் குடியிருப்பு பகுதி நடுவே உள்ள ஆலமரத்தின் கீழ், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த மரத்தில் 500க்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசிக்கின்றன. இவற்றை தெய்வ அம்சமாக கருதி, கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இதனால், வவ்வால்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க, தீபாவளியின் போது, பட்டாசு வெடிப்பதை அந்த கிராம மக்கள், மூன்று தலைமுறைகளாக தவிர்த்து வருகின்றனர்.
தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியான இன்று தி.மலை, வேலூர், கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தி.மலை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.
கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாகநவ.3 வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவ.-1 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று முதல் நவம்பர்-3 வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர்-1 அன்று திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்த கே. துரைராஜ் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று திருவண்ணாமலை வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல் திருவண்ணாமலை வட்டாட்சியராக பணியாற்றி வந்த தியாகராஜன் அவர்கள் வட்ட வழங்கல் அலுவலராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்ற சுமை தூக்கும் தொழிலாளி இன்று காலை ஆரணி நகருக்கு சுமை தூக்கும் தொழிலுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வேலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு பேருந்து, சைக்கிள் மீது மோதி நிலை தடுமாறி அவர் கீழே விழுந்ததில் பின் சக்கரம் ஏறி உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மனு அளிக்க மாவட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மொத்தம் 577 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடைச் செய்தல், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான வாராந்திர ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.