India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அர சால் ஆணையிடப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி நாளையுடன் முடிவடைகிறது. எனவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை சிறுபான்மையினர் அலுவலகத்தில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 498 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 15 ஆயிரத்து 692 மாணவர்கள், 14 ஆயிரத்து 825 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 517 மாணவ, மாணவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் 29 ஆயிரத்து 966 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 551 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயிலில் தினந்தோறும் வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து பக்தர்களும், பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, கிரிவலம் வந்தனர்.

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில், செய்யார் மற்றும் வந்தவாசி சட்டமன்ற நிர்வாகிகள் இணைந்து, திருவண்ணாமலை, அண்ணா சாலை அருகில் நாளை காலை 9 மணி அளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களைத் தடுக்க தவறியதாக கூறி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

தி.மலை மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கு

தி.மலை, தண்டராம்பட்டு, குப்பன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா (62) தனது நிலத்தில் தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேஸ்திரி வேலை செய்வதாக கூறி தண்ணீர் கேட்டுள்ளார். பின்னர் திடீரென வெண்ணிலாவின் கழுத்தில் இருந்த சுமார் 5 சவரன் தாலி சரட்டை அறுத்து கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தி.மலை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

தி.மலை மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <
Sorry, no posts matched your criteria.