India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் திங்கள் கிழமையான இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் இன்று காலை 6 மணி நிலவரப்படி 119 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 117.10 அடி நீர் நிரம்பி உள்ளது. அணைக்கு 1100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது அணையில் இருந்து 850 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் இரு தினங்களில் அணையின் முழு கொள்ளளவு எட்டும் என பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு.
தி.மலையில் மொத்தம் 204 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.17 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி அன்று மட்டும் ரூ.8½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் அடுத்த மாதம் டிசம்பர் 13 ஆம் தேதி மகா தீப திருவிழா நடைபெற உள்ளது. மேலும் கார்த்திகை தீப திருவிழாவின் 10 வது நாளான டிசம்பர் 10 ஆம் தேதி மகா ரதம் வீதியுலா நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மகா ரதம் வெள்ளோட்டம் வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 07.11.2024-ம் தேதி காலை 8 மணி முதல் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் ஒரு நாள் முன்னதாக 06.11.2024-ம் தேதி காலை 8 மணி முதல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும்.
வெளியில் செல்வோர் கட்டாயம் குடை ரெயின்கோட், ஜர்கின் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை வாங்கி வைக்கவும். வயதானவர்கள், உடல்நலம் பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வைக்கவும். மழை பெய்யும்போது, ஜன்னல் கதவுளை மூடி வையுங்கள். மின் பழுது பார்க்க வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்ச் போடாதீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கவும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் 21-ஆவது கால்நடைகள் கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள், விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தப் பணி, 2025 பிப்ரவரி மாதம் இறுதி வரை நடைபெறுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மலையில் மொத்தம் 204 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.17 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி அன்று மட்டும் ரூ.8½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை அருகே, 350 ஆண்டு பழமையான, 2 கல்வெட்டு உட்பட, 3 கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தச்சம்பட்டில் முருகன் கோவில் குளக்கரையில், 2 கல்வெட்டுகளை கண்டறிந்தனர். அதில், ஒரு கல்வெட்டில், குறு நில மன்னன் தன் மனைவியுடன் கூடிய, பலகை கல் சிற்பமும், மற்றொரு கல்வெட்டில் கிருஷ்ணப்பநாயக்கர் குளம், தர்ம சத்திரம் கட்டியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது. இவை, 350 ஆண்டு பழமையானவை.
Sorry, no posts matched your criteria.