India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் காரப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று இடைநின்ற மாணவர்களை, இன்று திமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சந்தித்து, கல்வி கற்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு பள்ளி சீருடைகள் பாடப் புத்தகங்களை வழங்கி, வகுப்பறையில் அமர வைத்தார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் நவ.14 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 23 மாவட்டக்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (11.11.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை துறை அலுவலர்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியனிடம் வழங்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை மாவட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (11.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு 2024 கார்த்திகை தீப திருவிழா விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், 01.12.2024 ஞாயிறு முதல் துவங்கி 17.12.2024 செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை பே கோபுர 1வது தெருவை சேர்ந்த கோபி என்பவர் தனது மனைவியைக் கொன்று சூட்கேஸில் அடைத்து கிருஷ்ணகிரியில் காட்டுப் பகுதியில் வீசிய சம்பவத்தில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கோபியின் தாய் சிவகாமி மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் அண்ணாமலையார் ஆலய கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து இன்று கோவில் வளாகத்தில் மற்றும் திருவண்ணாமலை முழுவதும் தமிழக காவல் துறை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு மேற்கொண்டார். வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் வேலூர் டிஐஜி தேவராணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கிரண்ஸ்ருதி ,ஸ்ரேயா குப்தா ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை: செங்கம், ஆடையூர், வேங்கிக்கால் உள்ளிட்ட இடங்களில் ‘மாரீசன்’ படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார்.
ஆரணி டவுன் சத்தியமூர்த்தி விஷாலையில் ஜனார்த்தனன்(55) என்ற நபர் நடத்திவரும் கடையில் ராஜேஸ்வரி(57) என்பவர் வேலை செய்து வந்த நிலையில், ஜனார்த்தனன் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடைக்கு மாணவியை அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், உள் மாட வீதியில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் அருகில் சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ப.கார்த்திவேல்மாறன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன், ஒப்பந்ததாரர் அருணை வெங்கட் உட்பட பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.