Tiruvannamalai

News November 18, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (18.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 18, 2024

தி.மலை: அண்ணாமலையார் கோயிலில் தங்கத்தேர் பவனி

image

திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், இன்று (18.11.2024) கார்த்திகை மாத முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு, திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News November 18, 2024

தி.மலை விளையாட்டு வீரர்களே தயாராகுங்கள்

image

தி.மலை எஸ்.கே.பி கல்வி குழுமம் நடத்தும் வாகை சூடவா 2.0 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நவ.30 மற்றும் டிச.01 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் 3 முதல் 17 வயது வரையிலான மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். தனிநபர் போட்டியில் சிலம்பம், சதுரங்கம், ஸ்கேட்டிங், குழு போட்டியில், கேரம், வாலிபால், மட்டைப்பந்து, எறிப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறள்ளது. மேலும் தகவலுக்கு 9442955580 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

News November 18, 2024

தி.மலையில் உழவர் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ்

image

திருவண்ணாமலையில் டிசம்பர் 21 ஆம் தேதி உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெறுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். உழவர்களின் துயரங்களுக்கு தீர்வுகளைப் பெறுவதற்காக மாநில மாநாடு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள உழவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என  ராமதாஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

News November 18, 2024

தி.மலையில்  87 ஏரிகள் முழுமையாக நிரம்பியது 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், செய்‌யாறு பகுதியில் 52 மி.மீ., மழை பதிவாகியுள்ளது, மற்ற பகுதிகளில் 27.6 முதல் 40 மி.மீ., வரை மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக 87 ஏரிகள் 100% நிரம்பியுள்ளது. மேலும், 23 ஏரிகள் 75% நிரம்பியுள்ளது, 50% அல்லது அதற்கு மேல் நிரம்பி 99 ஏரிகள் உள்ளது. மேலும் 3 ஏரிகளில் நீர் இல்லாத நிலையில் காணப்பட்டது.

News November 18, 2024

மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், தூசி ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் நடைபெறுவதை, திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் நேற்று (17.11.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

News November 17, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (17.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபேசி

News November 17, 2024

பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது

image

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119 அடி ஆகும். இன்றைய நீர் இருப்பு 117.3 அடியாக உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக தற்போது அணைக்கு 1360 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 17, 2024

தி.மலையில் அமைச்சர், எம்.பி சந்திப்பு

image

தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலுவிடம் நாளை (நவ.18) பிறந்தநாள் விழா காணும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M.S தரணிவேந்தன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News November 17, 2024

வாக்காளர் பட்டியல் முகாமை ஆய்வு செய்த எம்பி 

image

ஆரணி தொகுதி வெட்டியான் தொழுவம் ஊராட்சி பள்ளிக்கு ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M.S தரணிவேந்தன் MP நேரில்  சென்று பார்வையிட்டு புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வருகை தந்த மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் அதிகாரியிடம் மனு அளித்னர். உடன் மாவட்ட பொருளாளர் DA.தட்சிணாமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள்.

error: Content is protected !!