Tiruvannamalai

News December 7, 2024

 தி.மலை மாவட்ட ஆட்சியர் தகவல் 

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. 13-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படும். 9 தற்காலிக பேருந்து நிலையங்கள், 15  பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 22 தனியார் பேருந்துகள், 172 பள்ளி பேருந்துகள் , ரூ.10 பயண கட்டணத்திலும், 36 சிற்றுந்துகள் செயல்படும். ஆட்டோ கட்டணங்கள் ரூ.30 முதல் ரூ.50  என நிர்ணயிக்கப்பட்டன என ஆட்சியர்  பாஸ்கர பாண்டியன்  தெரிவித்தார்.

News December 7, 2024

தி.மலை முதல்வா் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விரும்பும் பி.பாா்ம்., டி.பாா்ம்.,சான்றிதழ் பெற்றவா்களோ அல்லது பி.பாா்ம் மற்றும் டி.பார்ம்.,படித்தவரின் ஒப்புதலுடன் மற்றவர்களோ நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு டிச.5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இணையதளத்தில் டிச.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

News December 7, 2024

தி.மலையில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

image

தி.மலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு, தேவிகாபுரம், அப்பேடு, கீழ்பெண்ணாத்தூர் மற்றும் தச்சாம்பாடி துணை மின்நிலையத்தில் இன்று மாதந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க

News December 6, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (06.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 6, 2024

தொட்டில் குழந்தை திட்டம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் தொட்டில் குழந்தை திட்டத்தில் நிரப்பப்படாமல் உள்ள 2 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 6382614143 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

News December 6, 2024

அம்பேத்கர் திருஉருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் 

image

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு, திருவண்ணாமலையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு அமைச்சர் எ.வ வேலு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்,துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி,மருத்துவர் கம்பன்,கிரி எம்எல்ஏ,நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன்,உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News December 6, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை 

image

தி.மலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா,(டிச.13)ஆம் தேதி நடைபெறுகிறது.அன்று அன்னதானம் வழங்க வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்பு மருந்து நிா்வாகத்துறை சாா்பில் அனுமதி டோக்கன்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியைப் பயன்படுத்தினால் அன்னதானம் வழங்குவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்தார்.

News December 6, 2024

தி.மலையில் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம்

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் சிறு வணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நாளை முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிறு வணிகர்களுக்கு உதவிக்கரம் நீட்டவே இந்த முகாம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 6, 2024

கால்நடைகளை வாகனத்தில் ஏற்றி செல்ல விதிமுறைகள்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

image

கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு வாகனத்தில் ஏற்றி செல்லும் முன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை, ஏற்றி செல்வதற்கான காரணம், வாகன எண் மற்றும் கால்நடை மருத்துவரின் சான்றிதழுடன் அனுமதி பெற்று ஏற்றிச் செல்ல வேண்டும். முறையான விதிமுறைகளை பின்பற்றாதவர் மீது பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு.

News December 5, 2024

தி.மலையில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

image

திருவண்ணாமலையில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை உள்ள நாட்களில் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்து பள்ளிகள் திறக்கும்போது 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 24 – ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளாது.

error: Content is protected !!