Tiruvannamalai

News December 12, 2024

சாத்தனூர் அணையில் 10,000 கன அடி நீர் வெளியேற்றம்

image

சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 119 அடி கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.45 அடியை எட்டி உள்ளது. சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் 6 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News December 12, 2024

கபீர் புரஸ்கார் விருது பெறத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமுதாய மற்றும் நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெறத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது இந்த விருது வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு & இளைஞர் நல அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 12, 2024

தி.மலையில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக தி.மலையில் இன்று (டிச.12) பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தி.மலையில் உள்ள பள்ளி, கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 11, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (11.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 11, 2024

திருவண்ணாமலையில் மலையேற அனுமதி இல்லை: அமைச்சர் 

image

திருவண்ணாமலை, கடந்த வாரம் ஃபெஞ்சல் புயல் மழையால் திருவண்ணாமலை மலைமீது 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நிபுணர் குழுவினர்கள் ஆய்வு செய்த அறிக்கையின் அடிப்படையில் கார்த்திகை தீபம் 13 ஆம் தேதி பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை. மகாதீபம் ஏற்றுவதற்கு கொப்பரை, நெய், திரி பாரம்பரியமாக எடுத்துச் செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

News December 11, 2024

அருணை தமிழ் சங்கம் சார்பில் விருதுகள்

image

திருவண்ணாமலை, அருணை தமிழ் சங்கம் சார்பாக 2024 ஆம் ஆண்டுக்கான தமிழுக்கு தொண்டாற்றியவர்கள், பொது தொண்டு புரிபவர்கள், கலை சேவை, ஆன்மீக சேவை, சமூக நீதி காவலர் ஆகிய விருதுகளுக்கு தி.மலை மாவட்டத்தை சார்ந்த தகுதியானோர் டிச.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அருணை தமிழ் சங்க தலைவர், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

News December 11, 2024

தி.மலை தீபத் திருவிழா; உதவி எண்கள் அறிவிப்பு 

image

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் போது கூட்ட நெரிசலைத் தவிர்க்க மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 04175 222303, 94981 00 431 அவசர உதவி எண் 100 மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் 91596 16263 ஆகிய உதவி எண்களை டிசம்பர் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அனுமதியின்றி வனப்பகுதிக்குள் செல்வது, மலை ஏற முயற்சிப்பது குற்றமாகும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News December 10, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 10, 2024

திமலை கார்த்திகை தீபத் திருநாள் அன்று உள்ளூர் விடுமுறை

image

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு வரும் 13-ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மேல் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படுவதால் அன்று திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் தனியார் நிறுவனங்கள் அனைவருக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிக்கை மாறாக 21ஆம் தேதி சனிக்கிழமை அரசு பணிகள் நடைபெறும் 

News December 10, 2024

சாத்தனூர் அணை திறப்பு: முதல்வர் விளக்கம்

image

முறையான எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது. அதனால் தான் பெரிய அளவில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது; அ.தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் திறக்கப்பட்டது.சாத்தனூர் அணையை பொறுத்தவரை, 5 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின் படிப்படியாக திறந்துவிடப்பட்டது என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

error: Content is protected !!