Tiruvannamalai

News December 25, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (25.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 25, 2024

செங்கம் அருகே ஒருவர் கொலை

image

செங்கம் அடுத்த கோ-புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாகண்ணு மகன் வெங்கடேசன்(40). இருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், மாம்பாக்கத்தில் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்ற இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் முருகன் என்பவர் வெங்கடேசனை தலையில் இரும்பு கத்தியால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 25, 2024

தி.மலையில் பிரபல நடிகர் சாமி தரிசனம்

image

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று திரைப்பட நடிகர் யோகி பாபு அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார். மேலும்  திருக்கோவில் தலைமை அர்ச்சகர் மற்றும் தலைமை குருக்கள் வரவேற்பு  அளித்தனர்.

News December 25, 2024

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய  ஆட்சியர் 

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன்   நேற்று  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் சார்பாக துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர் வட்டங்களைச் சார்ந்த விவசாயிகளுக்கு ரூ  43 லட்சம் மதிப்பீட்டில் 6 பவர் டில்கர், 3 மினி டிராக்டர், 600 மணிலா விதை விதைக்கும் வேளாண் இயந்திரங்களை வழங்கினார். உடன் ஐசிஐசிஐ வங்கி மண்டல மேலாளர் நாராயணன் மாவட்ட மேலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News December 24, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 24, 2024

விவசாய நிலத்தில் இறங்கி கார் விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரி பாளையம் அருகில் இன்று பெங்களூர் புறவழி தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த நபர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 24, 2024

தி.மலை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற டிச.28 ஆம் தேதி தி.மலைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 27ஆம் தேதி சென்னை வரும் அவர் 28 ஆம் தேதி தி.மலை அண்ணாமலையாரை தரிசனம் செய்யவுள்ளார். பின் மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும், அன்றைய தினமே மீண்டும் டெல்லி திரும்ப உள்ளார். அம்பேத்கரை அவர் நாடாளுமன்றத்தில் அவமதித்ததாக போராட்டம் வெடித்த நிலையில், தமிழகம் வரவுள்ளார். ஷேர் பண்ணுங்க.

News December 24, 2024

தி.மலையில் 657 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் பொதுமக்களிடமிருந்து 657 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள் மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News December 24, 2024

தமிழ் திறனறிவு தேர்வில் 79 மாணவர்கள் தேர்ச்சி

image

திருவண்ணாமலை மாவட்டம், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் 2024-2025 கல்வி ஆண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு கடந்த அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 2,35,025 மாணவர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 72 மாணவிகள், 7 மாணவர்கள் என 79 பேர் தேர்ச்சி பெற்று மாதம் ரூ.1,500 உதவித் தொகைக்கு தகுதி பெற்றனர்.

News December 24, 2024

தி.மலையில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று செய்யாறு மின்கோட்டம், பெருநகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆக்கூர், கூழமந்தல், வெள்ளாமலை, மகாஜனப்பாக்கம், உக்கம்பெரும்பாக்கம், நெமிலி, புன்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (டிச.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என் மின்வாரிய பொறியாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்க

error: Content is protected !!