Tiruvannamalai

News December 31, 2024

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (31.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2024

சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

image

சேத்துப்பட்டு அருகே வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்ய வனத்துறை சிறப்பு குழு கண்காணிக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்து வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம். காளைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவலுக்கு 97901 50045 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இதனைத் தெரிவித்தார்.

News December 31, 2024

தி.மலை:  உண்டியல் காணிக்கை ரூ.2.41 கோடி 

image

 திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில்,  கார்த்திகை மாத  உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று திருக்கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில்   கோவில் இணை ஆணையர் ஜோதி தலைமையில், நிரந்தர உண்டியல், கார்த்திகை தீபம் வெள்ளிக்குடம் உண்டியல் உள்ளிட்டவை திறக்கப்பட்டதில் ரூ.2.41 கோடி ரொக்கம், 65 கிராம் தங்கம், 1,350 கிராம் வெள்ளியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். 

News December 31, 2024

தி.மலையில் 470 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் பொதுமக்களிடமிருந்து  470 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள் மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News December 30, 2024

கேளூர் பால்வார்த்து வென்றான் தினசரி மார்க்கெட் விலை நிலவரம்

image

போளூர் – அடுத்த கேளூர் பால்வார்த்து வென்றான் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திருவண்ணாமலை விற்பனைக்குழு சார்பில், இன்றைய நெல் ரகங்களின் குவிண்டால் தினசரி மார்க்கெட் விலை நிலவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயன் பெறலாம் என ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

தி.மலை மாவட்ட  ஆட்சியர் அழைப்பு

image

திருவண்ணாமலையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரா் மாளிகையின் முதல் தளத்தில் 9 விருந்தினா் அறைகள் உள்ளன. முன்னாள் படைவீரா்கள் மற்றும் அலுவலா்கள், மத்திய, மாநில அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளர்கள் தங்குவதற்காக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள ஒராண்டு, இரண்டாண்டு பயிற்சிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மேலும், என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9499055873, 9499055872, 9443810040, 9597403476 என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News December 29, 2024

அவசர கால பாதுகாப்பு உதவியுடன் 60+ அம்சங்கள்

image

தமிழக அரசு உருவாக்கிய காவல் உதவி செயலி, 60-க்கும் மேற்பட்ட அம்சங்களுடன், அவசர காலங்களில் பெண்கள், மாணவிகள், முதியோர் பாதுகாப்பிற்கு உதவுகிறது. இதில் “அவசரம்” பொத்தானை அழுத்தி தகவல், இருப்பிடம், வீடியோ பகிரலாம். வாட்ஸ் அப், கூகுள் மேப் மூலம் உறவினருடன் இடம் பகிர முடியும். செயலியை Google Play Store-ல் பதிவிறக்கம் செய்யலாம்‌ என்று தி.மலை காவல்துறை தெரிவித்துள்ளது.

News December 29, 2024

தாட்கோ மூலம் குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் முன்முயற்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு TNPSC குரூப்-2, 2A தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படும். 21-32 வயதுடைய பட்டதாரிகள் தகுதியுடையோர். விடுதி வசதியுடன், செலவுகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். பதிவு www.tahdco.com மூலம் செய்யலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவித்தார்.

News December 29, 2024

திருவண்ணாமலை அருகே சிறுத்தை நடமாட்டம்

image

சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை, சித்தாத்துரை, காட்டுதெள்ளூர், ரெட்டிபாளையம், அல்லியாளமங்கலம், பாடகம் ஆகிய வனப்பகுதிகள் அருகேயுள்ள விவசாயிகளுக்கு வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆத்துரை வனப்பகுதியில் இன்று  தேடுதல் வேட்டை நடத்தப் போவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!