Tiruvannamalai

News January 5, 2025

அண்ணாமலையார் கோவிலில் மொத்த உண்டியல் காணிக்கை

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 2024 ஆம் ஆண்டு மொத்த உண்டியல் காணிக்கை ரூ.42 கோடியே 59 ஆயிரத்து 971 எனத் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டை விட உண்டியல் காணிக்கை ரூ.16 கோடி அதிகரித்துள்ளது. கடந்த ஜூன், டிசம்பர் 2024ஆம் ஆண்டு உண்டியல் காணிக்கை ரூ.5 கோடியை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 4, 2025

அண்ணாமலையார் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்

image

திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அருணாச்சலத்தை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். இன்று அமெரிக்காவை சேர்ந்த பக்தர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான புடவை, வேட்டி சட்டையுடன் ராஜகோபுரத்திற்கு முன் அமர்ந்து ஓம் நமச்சிவாய என்று மந்திரத்தை கூறி வழிபட்டனர்.

News January 4, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 4, 2025

தி.மலையில் விமான நிலையம் அமைக்கப்படும் – அமைச்சர்

image

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் பக்தர்களின் வசதிக்கேற்ப திருவண்ணாமலை, மேல்செங்கம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். தி.மலையில் விமான நிலையம் அமையுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 4, 2025

சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டு

image

ஆரணி டவுன் அல்முபீன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பயிலும் மாணவன் ஜெய விக்னேஷ்(4) 1 மணி நேரம் 30 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றி இந்திய புக் ஆஃப் ரெக்கார்டு, கலாம் வேர்ல்டு ரெக்கார்டு, பிபின் ராவாத் உள்ளிட்ட உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார். பள்ளியின் சார்பாக இன்று மாணவனை தாளாளர் ஏ.எச். இப்ராஹிம், பள்ளி நிர்வாக இயக்குநர் சாசியா பர்வின் ரியாஸ் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News January 4, 2025

ரூ. 2.18 கோடி மகாதீப நெய் காணிக்கை 

image

திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், நடந்து முடிந்த திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில், மகாதீப நெய் காணிக்கைகள் கவுண்டர்கள் மூலம் ரொக்கமாகவும், காசோலைகள் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மூலமாகவும் பெறப்பட்டது. இதன்படி, மகாதீப நெய் காணிக்கை மொத்தம் ரூ.2.18 கோடி பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

News January 4, 2025

தி.மலையில் 7.84 லட்சம் பொங்கல் பரிசுத் தொகுப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7,84,282 குடும்ப அட்டையாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். மேலும் டோக்கன் விநியோகம் வீடுகளில் தொடங்கப்பட்டு, நியாயவிலைக் கடைகளில் உரிய நேரத்தில்  பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் எனவும்  ஆண்கள், பெண்களுக்கு தனி வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

News January 3, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (03.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 3, 2025

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து இன்று பொதுமக்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

திருவண்ணாமலை ரயில் பயண நேரம் குறைப்பு

image

திருவண்ணாமலை- சென்னை ரயில் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரி முதல் திருவண்ணாமலையிலிருந்து காலை 4.30 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்னை கடற்கரையை 9.50 மணிக்கு சென்றடையும். சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!