India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ முதன்மைத் தோ்வு எழுத தகுதி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியினா் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது, நடைபெற்ற குரூப்-2, குரூப்-2 ஏ முதல் நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவுகளை தாட்கோ மூலம் வழங்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (06.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சென்னந்தல் கிராமத்தில் விவசாய நிலத்தில் எலிக்கு வைத்திருந்த விஷ மருந்தை அருந்திய 6 மயில்கள் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. எலி மருந்து வைத்த நில உரிமையாளர்கள் லிங்கேஸ்வரன் மற்றும் பாண்டியன் ஆகிய இருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் இன்று வெளியிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், சார் ஆட்சியர் பல்லவிவர்மா, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உட்பட பலர் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜன 8 ஆம் தேதி முதல் 62 நேரடி கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளுக்காக தொடங்கப்பட உள்ளதால் விவசாயிகள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். நெல் கொள்முதல் செய்யும் போது சிக்கல்கள், காலதாமதம் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555, 6385420976 ஆகிய எண்களின் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ்அப் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஈசான்ய மைதானத்தில் தேமுதிக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கண்டன உரையாற்றிய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாலியல் வன்முறைகள், நிவாரண நிதி குறைவு, திமுக ஆட்சியின் குறைகள் குறித்து ஆவேசமாக பேசினார். மேலும், போராட்டத்தில் ஈடுபடுவர்களை கைது செய்து திமுக மினி எமர்ஜென்சியை வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
திருவண்ணாமலையில் நேற்று செய்தியாளா்களிடம் பிரேமலதா கூறியதாவது: அமலாக்கத் துறை ஒவ்வொரு முறை சோதனை நடத்தும் போதும், அதன் அறிக்கையை பொதுமக்கள் அறியும் வகையில் தெளிவாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினாா்.முன்னதாக, அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (05.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் ஆகிய புதிய கட்டிடங்களை இன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு,வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சுவாமி தரிசனம் செய்தார். உடன் தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.