India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா நேற்று (ஜன.13) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பூஜை செய்தார். விழாவில், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். அலுவலர்களுக்கான கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், உறியடித்தல் போன்ற விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. பலரும் ஆவலுடன் கலந்து கொண்டனர்.
கலசபாக்கம் அருகே உள்ள திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குருவிமலை கிராமத்தில், நேற்று (ஜன.13) கார் – பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பைக்கில் பயணித்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (13.01.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அறுபத்து மூவர் ஆய்வு மையம் சார்பில், திருமஞ்சன கோபுரம் அருகில், பரதநாட்டியம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று (13.01.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் மற்றும் பரதநாட்டிய கலைஞர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
திருவண்ணாமலை ஜோதி பூ மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.2,500-க்கும், முல்லை ரூ.2,000-க்கும், ரோஸ் ரூ.250 முதல் ரூ.300க்கும் விற்பனையாகின்றன. விலை உயர்ந்த போதும் பூக்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளர்கள் நாராயணன், வேலு, ஆனந்தன் தலைமையில், காவலர்கள் சரவணன், விக்னேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாகவும், மது விற்பனை செய்ததாகவும் ஏழுமலை (65), காா்த்தி (35), உள்ளிட்ட 5 பேரை நேற்று போலீஸார் கைது செய்து, 38 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர்.
போகி பாண்டியான இன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் கடும் காற்று மாசு ஏற்படுகிறது. இந்த போகிக்கு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பெயரில் துணி, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை விட பிழையனவாம் கோவம், வெறுப்பு களைந்து புதியனவாம் அன்பு, பாசம் வளர்ப்போம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் தங்கள் பஞ்சாயத்து யூனியனில் பதவிக்காலம் முடியும்முன் தேர்தலை நடத்தாமல் சிறப்பு அலுவலர்களை நியமிக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு, தமிழக அரசு, தி.மலை ஆட்சியர், பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலாளர் ஆகியோர் பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி, மேல் நிலைக்கல்வி முடித்தவர்கள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை 10-ம் வகுப்பு தவறியவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல் நிலை தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.