Tiruvannamalai

News January 17, 2025

அண்ணாமலையார் கோயிலில் ஜெயம் ரவி வழிபாடு

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (ஜன.17) காலை நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவருக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சாமி வழிபாடு செய்துள்ளார். பின்னர், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

News January 17, 2025

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்

image

திரு​வூடல் – மறுவூடல் திரு​விழாவையொட்டி, அண்ணா​மலை​யார் நேற்று (ஜன.16) கிரிவலம் சென்​றார். 14 கி.மீ., ​வுக்கு கிரிவலம் சென்ற அண்ணா​மலை​யாரை பின்​தொடர்ந்து ஆயிரக்​கணக்கான பக்தர்​களும் சென்​றனர். வழியெங்​கும், மண்டகபடி மற்றும் கற்பூர தீபாராதனை காண்​பித்து பக்தர்கள் வழிபட்​டனர். தொடர்ந்து, சுவாமிக்​கும், அம்பாளுக்​கும் மறுவூடல் நிகழ்ச்சி நடைபெற்​றது. பின், இருவரும் பக்தர்​களுக்கு அருள்​பாலித்​தனர்.

News January 16, 2025

அண்ணாமலையார் கோவில் ஊழியர் மீது தாக்குதல்

image

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நேற்று (ஜன.15) சாமி தரிசனம் செய்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், பாலாஜி, ஹரிகரன், சூர்யா ஆகிய 4 பேர் அம்மன் சன்னதிக்குள் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. கோவில் ஊழியர் பாண்டியன் அவர்களை கண்டித்ததார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட, நால்வரும் பாண்டியனை தாக்கி உள்ளனர். புகாரின் பேரில் போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

News January 16, 2025

வெறி நாய் கடித்ததில் 25 பேர் காயம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொசபாளையம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 25 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெறி நாய் கடித்ததில் காயம் அடைந்த 25 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதற்கு நடவடிக்கை வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News January 15, 2025

திருவண்ணாமலையில் இரவு ரோந்து பணி காவலர்கள் 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (15.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 15, 2025

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்

image

திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜன.15) திருவண்ணாமலை மாநகராட்சியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.பி. அண்ணாதுரை, திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

News January 15, 2025

அமைச்சர் வேலுவிற்கு வாழ்த்து தெரிவித்த ஐஸ்வர்யா

image

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எ.வ.வேலுவை, நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா, நேற்று (ஜன.14) அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நினைவுப்பரிசு கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News January 15, 2025

திருவள்ளுவர் தினம்: டாஸ்மாக் கடைகள் இயங்காது

image

திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜன.15) புதன்கிழமை சென்னையில் உள்ள மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) ஆகியவைகளின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களும் இயங்காது. மீறி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது பிரியர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2025

நடிகர் ரஜினிகாந்த் மகள் சாமி தரிசனம்

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பக்தர்களுடன் கலந்து சிறப்பித்த ஐஸ்வர்யா, விழாவுக்குப் பிறகு வீடு திரும்பும்போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிப்பு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

News January 14, 2025

நாளந்தா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் முதல் பரிசு

image

சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில், பள்ளிகளுக்கான அறிவியல் செய்முறை விளக்க போட்டி அண்மையில் நடந்தது. இதில், செய்யாறு நாளந்தா சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, முதுநிலை விஞ்ஞானிகள் பிரிவில் முதல் பரிசு பெற்றனர். மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் ஆர்.வேல்முருகன், முதல்வர் குகரமணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

error: Content is protected !!