India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஜன.21) பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாமண்டூர், மாங்கால், மாத்தூர், சோழவரம், செல்லப்பெரும்புலிமேடு, ஏழாச்சேரி, சுருட்டல், வடகல்பாக்கம், பாவூர், பூனைத்தாங்கல், சித்தலாப்பாக்கம், அப்துல்லாபுரம், தூசி, நரசங்கலம், சோதியம்பாக்கம், மேனல்லூர், தண்டராம்பட்டு, பெருங்களத்தூர், ராதாபுரம், சாத்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது.
மண் சரிவால் வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு தனது சொந்த நிதியில் கட்டிய தற்காலிக வீடுகளை அவர்களிடம் ஒப்படைத்தார். கடந்த டிசம்பர் மாதம் பெய்த ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் பகுதியில் மண்சரிவு எற்பட்டது. இதில் பெரும் பாறைகள் உருண்டு வீட்டின் மேல் விழுந்ததில் 7 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் ஜன.24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். ஆட்சியரகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகிக்கிறாா். விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க உள்ளனர். ஷேர் பண்ணுங்க
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவராவ் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த சுமார் 3 கிலோ தங்க நகைகளை மக்கள் வியப்புடன் பார்த்தனர். இவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இவர் எங்கு சென்றாலும் இவ்வாறு நகைகளை அணிந்து செல்வது குறிப்பிடத்தக்கது. உங்க கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.01.2025) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த பொதுமக்களை சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தி.மலை மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறுகிறது. உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்’ என்ற தலைப்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஜன.25-ஆம் தேதி காலை 9 மணிக்கு பயிற்சி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அரியாலம், தச்சூர், களம்பூர், திருமணி, பெரியகொல்லப்பலூர், வேட்டவலம், மழவந்தாங்கல், கோனலூர், வீரபாண்டி, மதுரம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (19.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். இதில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் உடன் இருந்தார்
மதுப்பழக்கம் கொண்ட கணவரை பயமுறுத்துவதற்காக தீக்குளித்த மனைவி உயிரிழந்தார். தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செய்யாறைச் சேர்ந்த புனிதா நேற்று (ஜன.18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில், அனக்காவூர் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளா் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.