India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகளை குறித்து கலந்தாய்வு செய்தார். இந்த கலந்தாய்வில் செ.நாச்சிப்பட்டு கிராம ஊராட்சி செயலர் சௌந்தரராஜன், தி-மலை ஒன்றியம் கண்டிக்குப்பம் கிராம ஊராட்சி செயலர் தவமணி இருவரும் கிராம வரவு செலவு கணக்கில் வராததை கண்டறிந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.
திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி வரதராஜன், இவரது 2 1/2 வயது குழந்தை கடந்த 17ஆம் தேதி வெந்நீரில் அமர்ந்ததால் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தநிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணாபுரம் பகுதியில் கிணற்றில் குளிப்பதற்காக இறங்கிய வெங்கடேசன் என்ற தொழிலாளி, தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தண்டராம்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாணாபுரம் போலிசார் விசாரணை
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்களை (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
திருவண்ணாமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மாட வீதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. எனவே, மாட வீதியில் வசிப்பவர்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும், அடையாள அட்டை வழங்கப்பட உள்ளன. அதையொட்டி, நாளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) சிறப்பு முகாம் நடத்தி அவர்களுக்கு பாஸ் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் கெங்கை சூடாமணி கிராமத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஆந்திர பதிவெண் கொண்ட சுற்றுலா பஸ் திடீரென மோட்டார் சைக்கில்மீது மோதி, பின்னர் தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இந்த விபத்து குறித்து சேத்துப்பட்டு போலிசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும்.<
வந்தவாசி அருகே மழையூர் கிராமத்தில், நள்ளிரவில் வீடு புகுந்த மர்மநபர்கள் இருவர், கத்தியால் மிரட்டி 8 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பினர். வீட்டின் மாடி கதவு வழியாக புகுந்து, வீட்டிலிருந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி வினோதினியிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்டன. வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாநகர் 9வது தெருவில் காலிமனையில் உள்ள கழிவு நீர்தொட்டியில் ஆண் பிணம் கிடப்பதாக திருவண்ணாமலை டவுன். போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தபேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலிசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் திருவண்ணாமலை அண்ணாநகர் 10வது தெருவை சேர்ந்த அஸ்லாம் என்பது தெரியவந்தது.
தி மலை போளூர் அருகே படவேட்டில் அமைந்துள்ளது அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.மற்ற அம்மன் கோயிலில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.ஆனால் இங்கு வெட்டி எடுக்கப்பட்ட மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது.பிணி, வயிற்று வலி நீங்கவும் குழந்தை வரம் கிடைக்கவும் இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள்
Sorry, no posts matched your criteria.