Tiruvannamalai

News February 10, 2025

மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பெண்கள் கைது

image

கண்ணமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெண்ணிலா (57). இவர், தனது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் குளத்துமேட்டில் வசிக்கும் ரேவதி (43) என்பவர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 49 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News February 9, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (09.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 9, 2025

திருவண்ணாமலையில் இலவச சட்ட பயிற்சி வகுப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள பேருந்து நிலையத்தில்,  வரும் 23-02-2025 அன்று காலை 10 மணியளவில், பத்து ரூபாய் இயக்கம் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு நடத்தும் இலவச சட்டப் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இதில் தலைமை பயிற்சியாளர் வழக்கறிஞர் டாக்டர் நல்வினை விஸ்வராஜ் கலந்துகொள்ள உள்ளார். இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News February 9, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.<> ஷேர் பண்ணுங்க<<>>

News February 9, 2025

துணிக்கடையை சேதப்படுத்திய பெண்

image

வெறையூர் அருகே உள்ள இசுக்கழிகாட்டேரி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல், அவரது மனைவி கவிதா. இவர், அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் மனைவி ஜெயலட்சுமி என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயலட்சுமி, கவிதா வைத்திருக்கும் துணிக்கடைக்கு சென்று ஆபாசமாக பேசி துணிக்கடையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

News February 9, 2025

சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து சாவு

image

போளூர் அரசு பெண்கள் பள்ளி அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக  வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

News February 9, 2025

ஆசிரியை வீட்டில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

image

கீழ்பென்னாத்தூரை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு வேலன் நகரை சேர்ந்தவர் மகாவள்ளி, தனியார் பள்ளி ஆசிரியை. இவரது வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கீழ்நாத்தூரை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 1/2 பவுன் நகையை மீட்டனர்.

News February 8, 2025

அதிக மாத்திரைகள் எடுத்தாதல் மயங்கி விழுந்து பலி 

image

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வேலுவின் வீட்டில் லலிதா வசித்து வந்தார். உடல்நலம் பாதிப்பால், நேற்று முந்னதனம் அதிகப்படியான மாத்திரைகள் எடுத்துள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்தார். அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றதும், அவர் ஏற்கனவே உயிரிழந்தார் என தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலிசார் விசாரணை.

News February 8, 2025

3,63,936 பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் பிப்.10 முதல் குடல்புழு நீக்கும் தேசிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பிப்.17ல் விடுபட்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படும். 3,63,936 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2,127 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ ஊர்திகள், ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

News February 8, 2025

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் ஆகியவற்றை எதிர்வரும் 11.02.2025 வள்ளலார் நினைவு நாளன்று மூடப்படவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!