India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் தென்பட்டாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் அல்லது 100 என்ற எண்ணை அழைத்து தங்களுடைய புகார்களை பதிவு செய்யலாம்.
கீழ்நாயக்கன்பாளையம் கிராமம், ரோட்டுத் தெருவைச் சோர்ந்தவர் சந்திரா (61). ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளரான இவர், கடந்த 3.8.2020 கொலை செய்யப்பட்டாா். மது அருந்துவதற்கு பணம் தராததால் சந்திராவின் மூத்த மகன் வெங்கடேசன் (42) வந்தவாசி அருகே தாயை கொலை செய்தது, தெரியவந்தது. இந்த வழக்கில் வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கண்ணமங்கலம் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பத்தை சேர்றந்தவர் அமராவதி (60) நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் விஷம் கலந்த மருந்தை குடித்துவிட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது மகன் மூர்த்தி மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியு டன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அமராவதி இறந்து விட்டார்.இது குறித்து மூர்த்தி சந்தவாசல் போலீசில் புகார் செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (14.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
BSNL 4G மேம்படுத்தல் செயல்முறை தினமும் நமது திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாநகரத்திற்கு இன்னும் சில தினங்களில் 4G சேவை சிறப்பாக இருக்கும் என BSNL தரப்பு தெரிவித்துள்ளது. Airtel, jio,Vi ஐ ஒப்பிடும்போது BSNL குறைந்த விலை, குறைந்த பட்ஜெட் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உங்க கருத்து என்ன கமெண்ட்ல சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தி.மலை மாவட்டத்தில் மட்டும் 95 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
செய்யாறு அருகே வியாழக்கிழமை செய்யாறு சரக போலீசார் கழனிபாக்கம் கிராமப் பகுதியில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, போதையில் சுற்றிக் கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம்மிருந்து, 75 போதை மாத்திரைகள், 13 ஊசிகளை பறிமுதல் செய்து,தினேஷ் குமாா், விக்னேஷ், கோபி, ஞானசேகா் என 4 இளைஞா்களை கைது செய்தனா்.4 பேரையும் செய்யாறு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை தொகுதி நல்லவன்பாளையம் ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்டிவதற்கு இன்று(பிப்.13) அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் பூமி பூஜை செய்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்ட பேரவையின் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அடிக்கல் நாட்டினர்.
தன்டாரம்பட்டு, கீழ் ராவந்தவாடி கிராமத்தில் ராஜேந்திரன் (60) குடிசை வீட்டில் வசித்து வருகிறார். செங்கல் சூளையில் வேலை செய்பவர் ராஜேந்திரனின் பேத்தி ஜனனி (1½) பூச்சி மருந்து வைத்து இருக்கும் பெட்டியை குளிர்பானம் என எண்ணி குடித்தார். மயக்கமடைந்த சிறுமியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவள் இறந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று (12.02.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணை தென்பெண்ணையாற்று படுகையில் மீனவர் கூட்டுறவு சங்கத்தை சார்ந்த பங்கு மீனவர்கள் அணையில் மீன் பிடிப்பது தொடர்பான அமைதி கூட்டம் நடைபெற்றது. இதில், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.