India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ரோடு கரியமங்கலம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போச்சம்பள்ளியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பிக்கப் வேனின் பின்புறம் செங்கம் நோக்கி வந்த கார் மோதி சாலையின் ஓரம் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வாழைப்பந்தல் அருகே சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் பாலாஜி (24) குடும்ப பிரச்சினையால் சென்னையிலிருந்து மீண்டும் தி.மலை வந்தார். இந்நிலையில் மேட்டுப்பட்டி பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 21) போலியான ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக கொடுக்கப்படும் என மோசடிகள் தற்போது அதிகமாக நடந்து வருகின்றன எனவே கவனமாக இருக்கவும் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பகுதியில் விளையும் ஜவ்வாது மலை புளிக்கான புவி சார் குறியீடு பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலர் மூத்த அலுவலர் ரமணன் மற்றும் ஆலோசகர்கள் இணைந்து ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனையில் ரீட் தொண்டு நிறுவன இயக்குனர் வழக்கறிஞர் தனஞ்செயன், மேல்பட்டு வன சரகர் ரமேஷ் ஆகியோர் உள்ளனர்.
சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 28 வயதிற்குள் இருக்கும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.70,290 வரை சம்பளம். ஆர்வமுள்ளவர்கள் https://clri.org/careers.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச்.01. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
கீழ்பெண்ணாத்தூர் தாலுகா ஐங்குணம் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் நேற்று இரவு எட்டு முப்பது மணி அளவில் சோமசு பாடிக்கு வந்து ஓட்டலில் உணவு வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு அருகே அனாதிமங்கலம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் வெங்கடே சன் என்பவரின் மகன் யுவராஜ் (வயது 24). இவர் நேற்று அதிகாலை லாரியில் மணல் கடத்திக்கொண்டு சேத்துப்பட்டு மருத்துவாம்பாடி கூட்டு சாலை அருகே வந்து கொண்டிருந்தார்.அப்போது சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீ சார் லாரியை மடக்கி பிடித்து, பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தி வந்த யுவராஜை கைது செய்து விசாரணை
வடவணக்கம்பாடி சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றபோது, கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (55) கடையில் குட்கா மற்றும் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. பாஸ்கரன் மற்றும் ஜலாராம் மகன்கள் சாவாராம் (31), சனவலாராம் (26) மற்றும் சுரேஷ்குமார் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அரணி அருகே சேவூரில் கஞ்சா விற்பனை செய்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, சேவூரில் போலீசார்ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாபு அருகில் உள்ள கோயிலின் பின்புறம் மறைந்திருந்தார். அவரை மடக்கிப்பிடித்த போலீசார் அவரிடம் இருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பாபுவை கைது சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் மின் கசிவின் காரணமாக அலுவலகத்தின் கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், கம்ப்யூட்டர், பணம் என்னும் கவுண்டிங் இயந்திரம், டிவி, ஏசி உள்ளிட்டவைகள் முற்றிலும் சேதம் அடைந்தது.
Sorry, no posts matched your criteria.