Tiruvannamalai

News March 15, 2025

ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி 

image

ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் (62), காவலாளி, இவர் நேற்று (மார்ச்.14) ஆரணி-ஆற்காடு சாலையில் சங்கீதவாடி கூட்ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முன்றார்.அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி ,அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

News March 15, 2025

வெறிநாய் கடித்ததில் தொழிலாளி பலி

image

செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவர், பெங்களூரில் கூலி வேலை செய்து வந்த நிலையில்,விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். அவரை வெறிநாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து,அவா் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் முதலுதவி பெற்றுவிட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் நேற்று (மார்ச்.14) உயிரிழந்தாா்.

News March 14, 2025

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டம்.

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (14.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

News March 14, 2025

தீவை விலைக்கு வாங்கிய நித்தியானந்தர்

image

சர்ச்சைக்கு பெயர் போன நித்தியானந்தர் 1978ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள் திருவண்ணாமலையில் பிறந்தார்.தனது பன்னிரண்டாம் வயதில் ‘உடல் தாண்டி அனுபவம்’ எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக அடைந்தார்.இது அனைத்து மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தியானபீடம் என்ற சேவை நிறுவனத்தினை தொடங்கினர். இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளில் செயல்படுகிறது.தனி தீவில் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளார்.

News March 14, 2025

11 மாத குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை

image

சேத்துப்பட்டு அருகே கெங்காபுரம் கிராமத்தை சேர்ந்த கிருபானந்தன் – மாலா தம்பதியின் 11 மாத குழந்தை வேதா ஸ்ரீ கடந்த 28ம் தேதி சுயநினைவு இழந்து உயிரிழந்தது. மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், பாலின விகிதம் குறைவு காரணமாக மருத்துவர் அருண்குமார் புகாரில் தெரிவித்ததால், போலீசார் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். அறிக்கை பின் தகவல் தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

News March 13, 2025

ஊராட்சி மன்ற அலுவலகத்தை நொறுக்கிய இளைஞர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று மதியம் அரிவாளுடன் நுழைந்த மணிகண்டன் என்ற இளைஞர் அலுவலகத்தில் கண்ணாடி கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கினார். இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தினர் உடனடியாக விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். 15ஆம் <>தேதிக்குள் <<>>விண்ணப்பியுங்கள்.

News March 13, 2025

பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

பௌர்ணமியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்ல (TRAIN NO.06130) என்ற எண் கொண்ட ரயில் இன்று (மார்ச் 13) பகல் 12:40 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 2:15 க்கு சென்றடையும். விழுப்புரத்தில் இருந்து (TRAIN NO.06130) என்ற எண் கொண்ட ரயில் 9:25க்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு 11:10 க்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளர் உயிரிழப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கழிகுளத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பரசுராமன் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் பரசுராமனின் உடலை ஆம்புலன்சில் ஏற்ற மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

News March 13, 2025

3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி எரித்து கொலை

image

தி.மலையில் 3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி ஒருவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீயில் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விருதாம்பாள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த கொலை சம்பவத்தில் எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!