India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. புதிய ரேஷன் அட்டை பெறுபவர்கள், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளை மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைத்து, ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இருந்து ரூ.1000 வழங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கும் துறை தெரிவித்துள்ளது.
தி.மலை மாவட்டம், தெள்ளாரை சேர்ந்த தாய் தந்தையை இழந்த பெண்ணிற்கு திருமணம் ஏற்பாட்டு செலவிற்காக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் இன்று நிதி உதவி வழங்கினர். இந்நிகழ்வில், தெள்ளார் மத்திய ஒன்றிய செயலாளர் T.D.ராதா, வந்தவாசி நகர செயலாளர் A.தயாளன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
செய்யாறு டவுன் வெங்கட்ராமன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டில் உள்ள ஏசி இயந்திரம் திடீரென வெடித்து தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் காமராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு போலீசார் உடல் கருகிய நிலையில் இருந்த காமராஜின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
வந்தவாசி அருகே வெளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த எட்டியப்பன் -ஆதிலட்சுமி தம்பதி. நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஏழு சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனர். ஆதிலட்சுமி அளித்த புகாரின் பேரில் கீழ் கொடுங்கலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை
மகாத்மா காந்தி போல் வேடமிட்டு முதியோர் ஒருவர் திருவண்ணாமலை முக்கிய வீதிகளில் மௌனமாக நடந்து சென்றார். அவர் யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை விருப்பப்பட்டவர்கள் அளிக்கும் உதவிகளை தயங்காமல் ஏற்றுக்கொண்டார். வயது வித்தியாசம் இல்லாமல் அருகில் வந்தவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினார்.
செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் மூன்று குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆரணி எம்.பி. தரணிவேந்தன் செய்யாறு எம்எல்ஏ ஜோதி ஆகியோர் சிறுவர்களின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
போளூர் வட்டம், ஜவ்வாது மலை அடிவாரம் அத்திமூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 850 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கோடை விடுமுறைக்குப்பின் இன்று மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்து பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிரார்த்தனை கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணாக்கர்களுக்கு 2024-25 ஆம் கல்வியாண்டு செயல்பாடுகள், அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினர்.
உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அ.விஜயன் – ந. சங்கீதா இணையரின் திருமண விழா இன்று நடைபெற்றது. குறிஞ்சி இல்லத்தில் நடந்த இவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். உடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பூங்காவனம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பாக நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள், ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வந்தவாசியை அடுத்த மீசநல்லூரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் விக்ரமன், அன்பால் அறம் செய்வோம் குழுவினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மலை மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதியுதவியை தொடா்ந்து பெற ஜூன் 15 ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைத்தும், இ-கே. ஒய். சி செய்து முடித்தும் பயன்பெறலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஹரிகுமார் தெரிவித்துள்ளாா். 1 399 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தமான ஆவணங்களை இணைக்காமல் உள்ளனா். இவா்கள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்களை அணுகலாம்.
Sorry, no posts matched your criteria.