India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆரணி திமுக சார்பில் அண்ணா சிலை மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம் மற்றும் கிரேப் ஜூஸ் வழங்கப்பட்டது. இதில், ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளர் S.S.அன்பழகன், நகரச் செயலாளர் AC.மணி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
தி.மலை மாவட்டம், சென்ற மாதம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்தது.நேற்று தமிழ்நாடு அரசு பள்ளி தேர்வு துறையால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தி.மலை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் 31 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
செங்கம் அடுத்த அந்தனூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 2023-24 ம் ஆண்டுக்கான 10 வகுப்பு பொது தேர்வு எழுதினர். இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பாரதி மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாரட்டு தெரிவித்தனர். மாணவர்களின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்தி பாராட்டினர்.
திருவண்ணாமலையில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 97.52 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக 100 டிகிரிக்கும் மேலே வெயில் அதிகமாக பதிவான நிலையில் 100 டிகிரிக்கு கீழே வெயில் பதிவானதால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று அக்ஷய திருதியை தினம் என்பதாலும் வெயில் குறைவாக இருந்ததாலும் நகை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது, 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயில். மிக பழமையான குலதெய்வ வழிபாடு உடைய கோவில். இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பெரிய நுழைவாசலுடன் இக்கோயில் அமைந்துள்ளது.
தி.மலை மாவட்ட தடகள சங்கம் சார்பில் இலவச கோடைகால தடகளப் பயிற்சி முகாம் வரும் மே 15 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மே 13 மற்றும் 14ம் தேதிகளில் தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 583 பேர் தேர்வு எழுதியதில் 555 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 95.19 ஆகும். மாணவிகளின் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.
செங்கம் அடுத்த இறையூர் பகுதியை சேர்ந்த 75 வயது கம்சலா என்னும் மூதாட்டி, அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர் போபிக்கும் நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் பாச்சல் காவல் நிலையத்தில் கம்சலாபுகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நேற்று இருவரையும் அழைத்து விசாரணை செய்தபோது காவல் நிலையத்தில் கம்சலா மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.