India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி அருகே கல்குவாரியில் வெடி வைக்கும் போது கற்கள் சிதறியதில் விவசாயி ஆறுமுகம் (58) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனால் கிராம பொதுமக்கள் நேற்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மறையூர் கூட்ரோடு பகுதியில் கிராம பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் வசிப்பவர் பிரவீன் குமார். இவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது தண்ணீரில் மூச்சு திணறல் ஏற்பட்டு துடித்தார். இதனைக் கண்ட நண்பர்கள் இவரை மீட்டு ஆரணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். ஆரணி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தி.மலை அடுத்த ஏந்தல் பைபாஸ் சாலையில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ
.வே. கம்பன் சென்ற காரும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கம்பன் சென்ற கார் ரோட்டில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் கம்பனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரது ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். இருவரும் அருணை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக இரண்டாம் ஆண்டு உணவுத் திருவிழா மற்றும் விவசாய விளை பொருட்கள் விற்பனை சந்தை நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்தினர். இதனை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது
தி.மலை மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமாக மாதம் ரூ.2000 உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது 2024 – 2025 ஆண்டிற்கான லைஃப் சர்டிபிகேட் ( Life certificate) தி.மலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் முதல் வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை எஸ்.கே.பி., கல்விக் குழுமத்தின் சார்பில் இன்று செங்கம் நகரில் மாபெரும் ஓவியம், நடனம், பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பர்வின் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் 2 ஆம் ஆண்டு இயற்கை உணவுத் திருவிழா நாளை (12-05-2024) காலை 9 மணி முதல் 4 மணி வரை கர்மேல் கிண்டர் கார்டன் பள்ளி வளாகம், பெரியார் சிலை அருகில் நடைபெற உள்ளது. உணவு திருவிழாவில் பாரம்பரியம் உணவு, இயற்கை உணவு வகைகள், இயற்கை விளைபொருட்கள், புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகள்களான ஷாலினி, ஷோபனா பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று தனது தந்தையிடம் பேசிய பேசியபோது தந்தை கோபமாக திட்டியதால் சகோதரிகள் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.
வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வராக சிறப்பு பயிற்சி பயின்ற நித்யா(42) மற்றும் அவரது மகன் சந்தோஷ் ஆகியோர் அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற்று நித்யா 287/500 மதிப்பெண்ணும், அவரது மகன் சந்தோஷ் 300/500 மதிப்பெண்களும் பெற்றனர். கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், கண்டவராட்டி ஊ.ந.நிபள்ளி ஆசிரியர் சக்ரவர்த்தி ஆகியோர் அவர்களை பாராட்டினர்.
Sorry, no posts matched your criteria.