India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் அஷ்டலிங்க கோயில்கள், ஆதி அண்ணாமலையார் கோயில் உட்பட எல்லா கோயில்களிலும் இன்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் வரும் பௌர்ணமியை முன்னிட்டு சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
வளர்பிறை பிரதோஷ தினத்தை முன்னிட்டு இன்று(மே 20) காலை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து, காலை 8 மணிக்கு ஆந்திரா அமைச்சரும் நடிகையுமான ரோஜா அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை, ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று(மே 19) பெய்த கனமழையின் காரணமாக பீமன் அருவி நிறைந்து செந்நிறத்தில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
போளூர் அருகே கடலாடி பகுதியைச் சேர்ந்த அசன் பாஷா,, வெற்றிச்செல்வன் ஆகியோர் மூன்று சக்கர ஆட்டோவில் போளூர் பகுதியில் இருந்து வேலூர் சாலையில் பூண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது நேற்று இரவு வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பேருந்து மூன்று சக்கர வாகனத்தின் மீது மோதியதில் அசன் பாஷா, வெற்றிச்செல்வன் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு, இன்று (19.05.2024) விடுமுறை தினம் என்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர். இதனால், கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அண்ணாமலையாரையும் , உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தனர்.
தி.மலை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நாளை 19-05-2024 காலை 10 மணி அளவில் எஸ் முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் 11, 13, 15, 17, 19 வயது உள்ள ஆண், பெண் இருவருக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்கள் தர்மபுரியில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலத்தில் உள்ள பருவதமலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்னல் தாக்கியதில் சிலைகள் சேதம் அடைந்தன. மேலும் ஒரு இடிதாங்கி பழுதடைந்தது. இதை அடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 4.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு இடி தாங்கிகள் வரவழைக்கப்பட்டு பொருத்தும் பணிகள் இன்று தொடங்கியது.
திருவண்ணாமலை கன்னி கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஸ்ரீ வாசவி ஜெயந்தியை முன்னிட்டு திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய இளைஞரணி சார்பில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் ஆரிய வயசு இளைஞரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் 31 பேர் ரத்த தானம் வழங்கினர். இம்முகாமில் ஆரிய வைசிய சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நாளை மே 19ஆம் தேதி எஸ் கே பி பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக, மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவக்குமார் மற்றும் இணை செயலாளர் ஸ்ரீ ஹன்ஸ் குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
செங்கம் அடுத்து நாகப்பாடி தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை தொடங்கியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்தோர் 3 ஆண்டுகள், 12 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றோர் 2ஆண்டுகள் பட்டய படிப்பிற்கு நேரடியாகவும், ஆன்லைன் (https://www. tnpoly. in) மூலமும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.