India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நாளை 19-05-2024 காலை 10 மணி அளவில் எஸ் முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் 11, 13, 15, 17, 19 வயது உள்ள ஆண், பெண் இருவருக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்கள் தர்மபுரியில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலத்தில் உள்ள பருவதமலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்னல் தாக்கியதில் சிலைகள் சேதம் அடைந்தன. மேலும் ஒரு இடிதாங்கி பழுதடைந்தது. இதை அடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 4.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு இடி தாங்கிகள் வரவழைக்கப்பட்டு பொருத்தும் பணிகள் இன்று தொடங்கியது.
திருவண்ணாமலை கன்னி கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஸ்ரீ வாசவி ஜெயந்தியை முன்னிட்டு திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய இளைஞரணி சார்பில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் ஆரிய வயசு இளைஞரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் 31 பேர் ரத்த தானம் வழங்கினர். இம்முகாமில் ஆரிய வைசிய சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நாளை மே 19ஆம் தேதி எஸ் கே பி பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக, மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவக்குமார் மற்றும் இணை செயலாளர் ஸ்ரீ ஹன்ஸ் குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
செங்கம் அடுத்து நாகப்பாடி தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை தொடங்கியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்தோர் 3 ஆண்டுகள், 12 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றோர் 2ஆண்டுகள் பட்டய படிப்பிற்கு நேரடியாகவும், ஆன்லைன் (https://www. tnpoly. in) மூலமும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்கின்றனர். இவர்கள் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி வரும் 23 ஆம் தேதி முதல் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருவண்ணாமலையில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தி.மலை மாவட்டத்தில் இயங்கும் வாகன புகை பரிசோதனை மையங்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்தந்த வாகன புகை பரிசோதனை மையத்துக்கான தனிப்பட்ட கைப்பேசியை உரிமையாளரால் பயன்படுத்த வேண்டும். மேலும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்களது கருவியில் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கரபாண்டியன் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் என்னும் பணி வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று பாதுகாப்பு பணியில் 2- ஏடிஎஸ்பி, டிஎஸ்பி -8, 17- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 1099 காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தனூர் ஊராட்சி சென்ன சமுத்திரம் கூட்ரோடு பெங்களூர் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மேல்பள்ளிபட்டு செல்லும் கிராம சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் குண்டு குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. நாள்தோறும், மாணவர்கள் விவசாயிகள் என ஆயிரக்கணக்கான மக்கள் செல்லும் முக்கியமான இந்த சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
Sorry, no posts matched your criteria.