Tiruvannamalai

News July 10, 2024

ஆளுநர் தி.மலை வருகை: பலத்த பாதுகாப்பு

image

போளூர், திருமலை கிராமம், அருகந்தகிரி சமண மடத்தில் 20 நாட்களாக பிராகிருதம் பயிற்சி பெற்ற 60 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கவும், ஆச்சரிய அகலகங்க கல்வி அறக்கட்டளை சார்பில் 250 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையை வழங்கவும் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வருகைதர இருக்கிறார். ஆளுநரின் வருகையையொட்டி எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News July 9, 2024

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10ஆம் வகுப்பு முதல் பட்ட வகுப்பு வரை படித்து பதிவு செய்து ஐந்தாண்டு காத்திருப்பில் உள்ள 45 வயது உட்பட்டவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்கு ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் www.tnvelaivaaippu.gov.in இணையதளத்திலும் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

தி.மலை: தமிழ் செம்மல் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்

image

தி.மலை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டு தொண்டு செய்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் செம்மல் விருது, ரூ.25000 பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டு தமிழ் செம்மல் விருதிற்கு ஆகஸ்ட் 9 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்ப படிவத்தினை www.tamilvalarchithurai.tn.gov.in இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்

News July 9, 2024

போலி மருத்துவர்கள் குறித்து விழிப்புணர்வு தேவை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் 10க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிராமங்கள் நிறைந்த நம்ம மாவட்டத்தில் அரசு சார்பில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ, சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே போலி மருத்துவர்கள் குறித்த விழிப்புடன் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

அனுமதியற்ற விளம்பர பதாகைகள்- ஆட்சியர் எச்சரிக்கை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பாதாகைகளின் நிறுவனா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா். விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கான அனுமதியைப் பெற 15 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி இல்லாத பதாகைகளின் நிறுவனா் மீது ஓராண்டு சிறை, ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

News July 9, 2024

குறிப்பேடுகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கென குறிப்பேடுகள் தயாரித்து அதிக விலைக்கு விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடா்ந்து புகார்கள் வரப்பெற்றால் பள்ளிக் கல்வித்துறை மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.

News July 8, 2024

தி.மலையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம்

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News July 8, 2024

இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

தி.மலை மாவட்ட அரசு இசைப்பள்ளி பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்புகள் 12-ஆம் தேதி துவங்க உள்ளது. பாரம்பரிய கலைகள் தெருக்கூத்து, பெரியமேளம், பம்பை, கிராமிய பாடல் பிரிவுகளுக்கு 1 ஆண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளோர் தி.மலையில் உள்ள இசைப்பள்ளியில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாமென ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 7, 2024

நடிகர் யோகி பாபு திரைப்படத்தின் பூஜை

image

நகைச்சுவை நடிகர் யோகி பாபு புதிதாக ‘கான்ஸ்டபிள் நந்தன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் தொடக்க விழா பூஜை இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் யோகி பாபு மற்றும் ரவி மரியா ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

News July 7, 2024

திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இன்று (ஜூலை 7) இரவு 7 மணி வரை திருவண்ணாமரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

error: Content is protected !!