Tiruvannamalai

News January 10, 2026

தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 10, 2026

தி.மலை: Gpay, Phone pay பயனாளர்கள் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 10, 2026

திமலை: குறைந்த விலையில் வாகனம் வாங்க சூப்பர் வழி!

image

திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 130 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதில் 122 இருசக்கர வாகனங்கள், ஒரு முச்சக்கர வாகனம் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும். வரும் 12-ம் தேதி காலை 9 மணி முதல் எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் இந்த ஏலம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

News January 10, 2026

தி.மலை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

தி.மலை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 10, 2026

தி.மலை: மழையால் மின்தடையா? உடனே CALL!

image

தி.மலை மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!

News January 10, 2026

தி.மலை: சம்பவ இடத்துலயே துடிதுடித்து பலி!

image

வந்தவாசி அருகே பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (54), நேற்று வந்தவாசி – திண்டிவனம் நெடுஞ்சாலையில் இளங்காடு கூட்ரோடு அருகே சாலையைக் கடந்தபோது, அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பொன்னூர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயக்குமாரின் மனைவி கலைமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

தி.மலை: சம்பவ இடத்துலயே துடிதுடித்து பலி!

image

வந்தவாசி அருகே பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (54), நேற்று வந்தவாசி – திண்டிவனம் நெடுஞ்சாலையில் இளங்காடு கூட்ரோடு அருகே சாலையைக் கடந்தபோது, அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பொன்னூர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயக்குமாரின் மனைவி கலைமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

வந்தவாசியில் 4 பேர் அதிரடி கைது!

image

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே சென்னாவரம் அசோக்குமார், வந்தவாசி வெங்கடேசன், முருகன் மற்றும் புன்னை கிராமத்தைச் சேர்ந்த சிவா ஆகியோர் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களைப் பிடித்து கத்திகளைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

தி.மலை: கொடூரனுக்கு வாழ்நாள் சிறை

image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் பழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (38) என்பவர், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தி.மலை POCSO நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று (09.01.2026) தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

News January 10, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜன.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!