Tiruvannamalai

News July 13, 2024

விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

image

தி.மலை மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் ஜுலை.19 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தி.மலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பெற்றோர், மூத்த குடிமக்களின் நலன் பாதுகாப்பு சட்டப்படி பராமரிப்புத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்; அவர்களின் விண்ணப்பங்களுக்கு 90 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மேலும், 14567 என்ற கட்டணமில்லா முதியோர் உதவி எண் சேவை காலை 8 முதல் இரவு 8 மணி வரை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

தி.மலை: பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2024-25 நிதி ஆண்டிற்கான பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் வாழை, மரவள்ளி ஆகியவற்றிற்கு செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யவேண்டும். ராபி பருவத்தில் சிவப்பு மிளகாய் பயிருக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்குள்ளும், மரவள்ளி, வாழைக்கு பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

தி.மலை: ஆட்சியர் வெளியிட்ட தகவல்

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில், “மாவட்டத்தில் இன்று, குரூப் 1 தேர்வை 4864 பேர் எழுதுகின்றனர். முறைகேடுகள் நடைபெறாதவண்ணம் 16 கண்காணிப்பாளர், 16 மொபைல் யூனிட், ஒரு பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளன. மேலும், வினா, விடைத்தாள்களை பாதுகாப்பாக சேர்க்கவும் தேர்வு முடிந்ததும் பாதுகாப்பாக கொண்டு வரவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

News July 12, 2024

திருவண்ணாமலை: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (12-07-2024) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தமான ஆலோசனை கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (11.07.2024) காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

News July 12, 2024

தி.மலை கல்லூரி மாணவர்களுக்கு நற்செய்தி

image

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் https://ssp.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் வரும் ஜுலை.31 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

image

திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் காங்கிரஸ் எஸ்சி பிரிவின் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கையில் கருப்பு கொடி ஏந்தி பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து பல்வேறு கோஷங்கள் மற்றும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

News July 11, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்

image

வார விடுமுறையையொட்டி ஜூலை 13, 14 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்தும் கோயம்பேட்டில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், இப்பேருந்துகளில் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News July 11, 2024

தி.மலை இளைஞர்களுக்கு நற்செய்தி

image

தி.மலை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜுலை 15 அன்று மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.14,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த பயிற்சி சான்று பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ளோர் www.apprenticeshipindia.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!