Tiruvannamalai

News January 12, 2026

தி.மலை: 12th போதும்.. ரயில்வே துறையில் வேலை ரெடி!

image

இந்திய ரயில்வே துறையில் 8 பிரிவுகளின் கீழ் 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.29-க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 12, 2026

தி.மலை: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

image

தி.மலை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

தி.மலை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

News January 12, 2026

தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News January 12, 2026

தி.மலை: செல்வம் பெருக இங்கு போங்க!

image

தி.மலை மாவட்டம் ஆரணி வட்டம் தேவிகாபுரத்தில் பெரியநாயகி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 14ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாகும்.இந்த கோயிலில் அம்மன் பக்தர்களுக்கு அருள் தந்து வருகிறார், மேலும் செவாய்க்கிழமைகளில் வந்து அம்மனை தரிசிப்பதின் வழியே வீட்டில் இருக்கும் கடன் சுமை குறைந்து செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. குழந்தைகளின் கல்வி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.ஷேர்

News January 12, 2026

தி.மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருவண்ணாமலை மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!

1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 12, 2026

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

image

தி.மலை மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க, கலெக்டர் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2முறைக்கு மேல் பிடிபடும் மாடுகளைப் பொது ஏலத்தில் விடவும், உத்தரவிடப்பட்டதுள்ளது.

News January 12, 2026

வந்தவாசியில் பயங்கரம்!

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட பத்திர எழுத்தர் இந்திரன் என்பவரை, அந்த கும்பல் கத்தியால் வெட்டியது. இதில் காலில் பலத்த காயமடைந்த இந்திரனுக்கு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் 18 தையல்கள் போடப்பட்டன. இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News January 12, 2026

திருவண்ணாமலையில் துடிதுடித்து பலி!

image

போளூர் அருகே, மட்டபிறையூரிலிருந்து மொடையூர் கிராமத்திற்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்த நண்பர்கள் விஜய் (25) மற்றும் விக்னேஷ் (16) ஆகிய இருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போளூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

News January 12, 2026

தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (11.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும், ரோந்து காவலர் தொலைபேசி என்ணை மேலே காணலாம். அவசர தேவைக்கு மேலே உள்ள இரவு ரோந்து காவலர் தொலை பேசி என்னை அழைக்கவும். ஷேர் செய்யவும்.

error: Content is protected !!