India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 6 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், திமுக – 1,36,769 வாக்குகளும், அதிமுக – 81,682 வாக்குகளும்,
பாமக – 71,059 வாக்குகளும், நாதக- 19,783 வாக்குகளும் பெற்றுள்ளன. ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 6 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 55,087 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் 1,79,444 அதிமுக வேட்பாளர் 1,00,272 ,பாஜக வேட்பாளர் 52,765 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 79172 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் நான்காவது சுற்று முடிவு வெளியாகியுள்ளது. அதில், திமுக – 81,353 வாக்குகளும், அதிமுக – 51,109வாக்குகளும்
பாமக – 41,258 வாக்குகளும், நாதக- 11,551 வாக்குகளும் பெற்றுள்ளன. இதன்படி திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 30,244 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 3 வது சுற்று முடிகள் வெளியாகி உள்ளது. அதில் திமுக வேட்பாளர்- 67,325, அதிமுக வேட்பாளர் – 40,736, பாமக வேட்பாளர் – 34,904, நாதக வேட்பாளர்- 9529. வாக்குகள் பெற்றுள்ளனர். அதில் திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 26,589 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் முன்னனி நிலவரம்:
திமுக வேட்பாளர் 57937
அதிமுக வேட்பாளர் 39032
பாஜக வேட்பாளர் 19535
நாத வேட்பாளர் 10139
திமுக வேட்பாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்து வருகிறார்
திருவண்ணாமலையில் மக்களவைத் தொகுதியில்
ஜோலார்பேட்டை தொகுதி
மின்னணு வாக்கு சுற்று -4
திமுக – 3705
அதிமுக – 2294
நாதக – 829
பிஜேபி – 1421
திமுக முன்னிலையில் உள்ளது
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். தி.மலை தொகுதி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் முன்னிலையில் உள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு அறைகளில் வைக்கப்பட்ட சீல் மற்றும் அறைகளை ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் சுஷாந்த் கௌரவ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலையில் சீல்கள் உடைக்கப்பட்டு வாக்கு பதிவு இயந்திர அறைகளை தற்போது திறக்கப்பட்டது.
2024 மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் மொத்தம் 74.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை, அதிமுக சார்பில் கலியபெருமாள், பாஜக சார்பில் அஸ்வத்தாமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-டன் இணைந்திருங்கள்.
Sorry, no posts matched your criteria.