Tiruvannamalai

News July 15, 2024

தி.மலை ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பாக வருகின்ற 21.07.2024 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில், இடைநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று
(15-07-2024) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 15, 2024

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், இன்று (15.07.2024) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். மேலும், கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News July 15, 2024

திருவண்ணாமலை இளைஞர்களுக்கு நற்செய்தி

image

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சார்பில், வரும் 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் <>https://www.tnprivatejobs.tn.gov.in/<<>> என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

அண்ணாமலையார் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்கள்

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வார விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநில பக்தர்கள் வருகை தருவர். இரண்டு நாள் தொடர் அரசு விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கூட்டத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

News July 14, 2024

கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

image

திருவண்ணாமலை, பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதை பக்தர்கள் பலர் தங்களது கடமையாக செய்து வருகின்றனர். இந்த மாதம் (ஆடி மாதம்) கிரிவலம் செல்ல ஜூலை 20 மாலை 5.59 மணி முதல் ஜூலை 21 ஞாயிறு மாலை 3.46 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் இந்த நேரத்தை பயன்படுத்தி கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 14, 2024

நெல் பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்

image

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் 2024-25 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல் பயிருக்கு பிரீமியம் தொகை செலுத்த நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகள் காப்பீட்டு பலனை பெற உடனடியாக நாளை மாலைக்குள் பிரீமியம் தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்ட முகாம் 18 ஒன்றியங்களில், 860 கிராம ஊராட்சிகளில், 124 சிறப்பு முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் அளித்து தீர்வு பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

TNPSC குரூப் 1 தேர்வில் 1470 பேர் ஆப்சென்ட்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று TNPSC குரூப் 1 போட்டி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 4,846 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 3,376 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 1,470 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. எந்த வித பிரச்சனைகளும் முறைகேடுகளும் இன்றி தேர்வு அமைதியான முறையில் நடந்தது என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் மத்திய, மாநில அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்கள் இலவச தையல் இயந்திரம் பெற மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தில் ஜூலை 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!