Tiruvannamalai

News August 5, 2025

தி.மலை: ரேஷன் கடைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு!

image

தி.மலை: ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். <>இந்த லிங்கில்<<>> உங்கள் புகார்களை பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள். தொடர்புக்கு 1967 (அ) 18004255901. ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News August 5, 2025

தி.மலை ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

தி.மலை பௌர்ணமி வரும் 08.08.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, பௌர்ணமி நாளன்று நகருக்குள் வெளியூரிலிருந்து வரும் ஆட்டோக்கள் கியூ.ஆர் (QR) கோடில்லைாத ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரி, காவல்துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.

News August 5, 2025

தி.மலை: வீட்டில் இருந்தே மாதம் ரூ.45,000 வரை சம்பளம்

image

தி.மலை மக்களே பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று வீட்டில் இருந்தே பணிபுரிய வாய்ப்பு தருகிறது, Frontend Developer என்ற பதிவுக்கு கணினியில் முதுகலை பட்டம், அல்லது IT சம்மந்தமான படிப்பு ஏதும் படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு மாதம் 30,000-45,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

திருவண்ணாமலை உழவர் சந்தையின் விலை நிலவரம்

image

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய (ஆகஸ்ட்.5) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. 1 கிலோ தக்காளி – ரூ.40, வெங்காயம் – ரூ.50, உருளை – ரூ.35, கத்தரி – ரூ.48, பீட்ரூட் – ரூ.38, வெண்டை – ரூ.30, முருங்கை – ரூ.20, இஞ்சி – 60, பீன்ஸ் – 70, கேரட் – ரூ.66,அவரை- ரூ. 50, முள்ளங்கி- ரூ. 15, புடலை – ரூ.40, மாங்காய் – ரூ.20/15, கீரைகள் – ரூ.40 என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

News August 5, 2025

தி.மலை சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…

image

தி.மலை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

தி.மலை: 10th பாஸ் போதும் ரயில்வே வேலை ரெடி

image

கொங்கன் ரயில்வேயில் உள்ள முக்கிய பதவியாக கீமேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை வரும் ஆக.11ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். செம்ம வாய்ப்பு, ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

தி.மலை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 627 மனுக்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் (ஆகஸ்டு.04) திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி 627 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

News August 5, 2025

தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி கிராம சேவை மைய கட்டிடத்தில், நாளை ஆகஸ்ட்-5, செவ்வாய்க்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. அஸ்வநாகசுரணை, பீமானந்தல் (ம) சின்னகோளாப்பாடி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு அரசின் 15 துறைகளின் 45 விதமான சேவைகள் வழங்கிட பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது.

News August 4, 2025

தி.மலை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக (ஆகஸ்ட்.4) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News August 4, 2025

தி.மலை: நோய்களை தீர்க்கும் அற்புத தளம்

image

தி.மலை மாவட்டம் ஆரணி அருகே இஞ்சமேட்டில், இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும், இந்த கோயிலில் அருள்தரும் சிவபெருமானை செவ்வாய்க்கிழமைகளில் தரிசித்து, கோயிலில் தரும் தீர்த்தத்தை அருந்தினால் பலவகை நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் குழந்தை வரம் தரும் அற்புத தளமாகவும் இருக்கிறது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!