Tiruvannamalai

News March 21, 2025

சூரிய சக்தி பேனல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்ற தனியார் சோலார் பேனல் நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. டிகிரி,டிப்ளமோ, ஐடிஐ, +2 தேர்ச்சி பெற்றிந்தால் போதும். சென்னையில் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் மாத சம்பளம் 15,000 முதல் 25000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்க கிளிக்<<>> பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. 

News March 21, 2025

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் தகவல்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஏழ்மையான நிலையில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பொறியியல், மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், வேளாண்மை ஆகிய தொழிற்படிப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது கல்வியை தொடர்வதற்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல்

News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன.24 வயது நிறைந்திருக்க வேண்டும்.10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <>விண்ணப்பிக்கும் <<>>லிங்க்.ஷேர் பண்ணுங்க மக்களே

News March 21, 2025

பிரான்ஸ் பெண்ணை பலாத்காரம் செய்த கஞ்சா நபர்

image

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 46 வயது பெண் ஜனவரியில் ஆன்மிக பயணமாக தி.மலை வந்தார்.கடந்த 17ம் தேதி வெங்கடேசன் (30) என்பவர் அவரிடம் மேலே உள்ள ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்தால் முக்தி கிடைக்கும் என கூறி அழைத்துச் சென்றார்.கஞ்சா போதையில் இருந்த அவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தப்பினார்.அப்பெண் பிரான்ஸ் நாட்டு துாதரகத்திற்கு தெரிவித்ததை அடுத்து திருவண்ணாமலை போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர்

News March 21, 2025

21 குண்டு முழங்க தி.மலை வீரர் உடல் நல்லடக்கம்

image

தி.மலை, செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் குமார். காஷ்மீரில் 62வது படை தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்தார். கடந்த 18ம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில், வலது மார்பில் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான வெம்பாக்கம் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

News March 20, 2025

குழந்தை வரம் அருளும் மணிச்சேறை உடையார்

image

தி.மலை மாவட்டம் இஞ்சிமேடு பகுதியில் மணிச்சேறை உடையார் கோயில் அமைந்துள்ளது. நவபாஷாண லிங்கமாக அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கு பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் குணமாகிறது. அத்துடன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தீர்த்தத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

21 குண்டுகள் முழங்க ராணுவ வீரருக்கு மரியாதை 

image

வெம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜீவகன் ஓய்வு பெற்ற போலீஸ். இவரது மகன் வினோத்குமார் (49). காஷ்மீர் பகுதியில் 62வது படைத்தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார்.காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார்.அவரது உடல் வெம்பாக்கத்தில் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.இறந்த ராணுவ வீரருக்கு மாலை அணிவித்து 21 குண்டுகள் முழங்கவீர வணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

News March 20, 2025

தி.மலையில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழா

image

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு மார்ச் – 22,23 ஆகிய 2 தினங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது திருவண்ணாமலை மாவட்டத்திற்கான பொறுப்பாளர் தே.அருள், 8667399314 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.

News March 20, 2025

500 திருவண்ணாமலை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வரும் மார்ச் 21 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வோர்கள் <>இந்த <<>>இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு 04175-233381.

News March 20, 2025

மார்பில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் வீரமரணம்

image

செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜீவகன் ஓய்வு பெற்ற போலீஸ். இவரது மகன் வினோத்குமார் (49) காஷ்மீர் பகுதியில் 62வது படைத்தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். கடந்த 18ம் தேதி மாலை 3.49 மணியளவில் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் இவரின் வலது மார்பு அருகே தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வீரமரணம் அடைந்தார்.

error: Content is protected !!