Tiruvannamalai

News July 31, 2024

53 மாணவர்களுக்கு ரூ.2.60 கோடியில் கல்விக் கடன்கள்

image

திருவண்ணாமலையில் இந்தியன் வங்கி சாா்பில் கல்விக் கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு கடனுதவிகள் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில், உயா்கல்வி பயிலும் 53 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.60 கோடியில் கல்விக் கடன்கள் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான தொழில் கடன்களை ஆட்சியா் வழங்கினாா்

News July 31, 2024

அரசு கலைக் கல்லூரியில் 4-ம் கட்ட கவுன்சிலிங்

image

திருவண்ணாமலை அரசு கலைஞர் கருணாநிதி கலைக் கல்லூரியில் ஆக., 1,2 ஆகிய 2 நாட்கள் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான 4-ஆம் கட்ட கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. பிஎஸ்சி பட்டப் படிப்பில் கணிதம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல் துறைகளுக்கு 1-ஆம் தேதியும், பி.காம், பிபிஏ பொருளியல் பி.ஏ வரலாறு, பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் உள்ளிட்ட துறைகளுக்கு ஆக.2-இல் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.

News July 31, 2024

பேருந்து மோதி கல்லூரி பேராசிரியர் உயிரிழப்பு

image

போளூர் அடுத்த சந்தைமேடு சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் சேத்துப்பேட்டை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு பைக்கில் செல்லும் போது முருகாபாடி அடுத்த பங்களாமேட்டில் எதிரே வந்த தனியாா் பள்ளிப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ஸ்ரீதா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீசார் விசாரனை.

News July 31, 2024

திருவண்ணாமலை அரசு கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

image

திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு புதிய வங்கி கணக்குகள் தொடக்கம் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். இதில், மாவட்ட சமூக நல அலுவலர் சரண்யா உடன் இருந்தார்.

News July 31, 2024

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 4,829 மனுக்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் 4 இடங்களில் நேற்று(ஜூலை 30) நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 3 ஆயிரத்து 562 மனுக்களும், நகா்ப்புறங்களில் நடைபெற்ற முகாம்களில் ஆயிரத்து 267 மனுக்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 829 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

News July 30, 2024

மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

image

தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். இன்று, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சாத்தனூர் அணையை தூர்வாரி, திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி மக்கள் தண்ணீர் அருந்திட வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய ஜல சக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

News July 30, 2024

திருவண்ணாமலையில் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News July 30, 2024

நகராட்சி குப்பை கிடங்கு இடம் மாற்றம்; அமைச்சர் ஆய்வு

image

திருவண்ணாமலை ஈசான்யம் பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை, புனல்காடு பகுதிக்கு மாற்றுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குப்பை கிடங்கு மாற்றப்படும் இடமான புனல்காடு பகுதியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். குப்பை கிடங்கு அமையவுள்ள இடத்தில் மக்களை பாதிக்காத வங்கியில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மக்காத குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

News July 30, 2024

கிரிவலப்பாதையில் கட்டாய பண வசூல்

image

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது அவர்களை மடக்கி சில திருநங்கைகள் கட்டாய பண வசூலில் ஈடுபடும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.திருவண்ணாமலைக்கு ஆடிக் கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்று வருகிறார்கள்.அப்போது பக்தர்களை மடக்கி திருநங்கைகள் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோருகின்றனர்.

News July 29, 2024

அரசு மாதிரி பள்ளியில் நண்பர்கள் தின விழா

image

திருவண்ணாமலை மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் நண்பர்கள் தின விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமையாசிரியர் இராமதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு
விருந்தினராக நாடக ஆசிரியர் கோணலூர் சா.முத்து கலந்துக் கொண்டு கூத்துக் கலைக் குறித்து
மாணவர்களிடம் பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!