Tiruvannamalai

News January 18, 2026

தி.மலை: சொந்த தொழில் தொடங்க ஆசையா?

image

தி.மலை மக்களே, வேலை தேடும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் UYEGP திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் துவக்க ரூ.15 லட்சம் கடனும் 25% மானியமும் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு உள் இருந்து 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். குடும்ப வருமானம் வருடத்திற்கு ரூ.8 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர்.

News January 18, 2026

தி.மலை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். தி.மலை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புகளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 18, 2026

தி.மலைக்கு வந்த திரைப் பிரபலம்!

image

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இன்று (ஜன.18) சிறப்பு தரிசனம் செய்தனர். காலை நேரத்தில் கோயிலுக்கு வருகை தந்த அவர்கள், அண்ணாமலையாரை வழிபட்டு பூஜைகளில் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மரியாதை செலுத்தி பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

News January 18, 2026

தி.மலை: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கின்<<>> மூலம் பிப்ரவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்பண்ணுங்க. வேலை தேடும் ஒருவருக்காவது யூஸ் ஆகும்!

News January 18, 2026

தி.மலை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தி.மலை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

தி.மலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

image

செய்யாறு, நாயன்தாங்கலைச் சேர்ந்தவர் தங்கராஜ் (36). இவர் சென்னையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி திவ்யபாரதி. இவர்களுக்கு ராஜேஷ் (7), லத்தீஷ் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த தங்கராஜ், தனது 2 மகன்களுடன் ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். மூவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், மூவரும் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 18, 2026

தி.மலை: விபத்தில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

வந்தவாசி, மும்முனியை சோ்ந்தவா் தா்மன் (25). தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை பைக்கில் வந்தவாசிக்கு சென்ற போது, இந்திரா நகா் அருகே செல்லும் போது, முன்னால் சென்ற மினி சரக்கு வேனை முந்த முயன்றுள்ளார். இதில் வேன் மீது மோதியதில் இவா் கீழே விழுந்த போது, பின்னால் வந்த பைக் மோதியதில் தா்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 18, 2026

தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

தி மலை: இன்று இரவு ரோந்து காவலர் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!