India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலக ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செல்லும் போது இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
தி.மலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் 2 குழந்தை திருமணம் நடக்க இருந்ததை கண்டறிந்து தடுக்கப்பட்டது. குழந்தை திருமணங்களை தடுக்க தொடர்ந்து கிராமங்களில் ஆய்வு செய்ய வேண்டும். குழந்தை திருமணங்களை நடத்துபவர், ஏற்பாடு செய்பவர், பங்கேற்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுமென மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்தார்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் இன்று தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், கள்ளச்சாராயம் மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தின் 2024 ஆண்டின் 2ஆம் காலாண்டு பொதுமக்களின் அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட குறைதீர் கூட்டம் தி.மலை தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறும். பொதுமக்கள் அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட குறைகளை நேரடியாகவோ அல்லது 27 ஆம் தேதிக்குள் தபால் மூலமோ அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்டம், சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த 18 முதல் 60 வயதுக்குட்பட்டோர் அமைப்புச் சாரா நிறுவனங்களில் பணிபுரியாத ஒருவர் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெறலாம். ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பௌர்ணமி தினத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். காகிதங்கள், டம்ளர்கள், இளநீர் ஓடுகள் போன்றவைகள் கிரிவலப் பாதையில் ஆங்காங்கே குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராது சுத்தம் செய்து வருகின்றனர். தி.மலை வரும் பக்தர்கள் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல் சிதற விடுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தனர்.
தி.மலை மாவட்டம், ஆரணி டி.எஸ்.பி ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் ஆரணி தாலுகா மற்றும் சந்தவாசல் பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பையூர் கிராமம் சிவக்குமார் (35), ராமதாஸ் (35), வேண்டா (45), சாந்தி (53), வனிதா (49), படவேடு தயாளன் (40) ஆகியோரிடம் பதுக்கி வைத்திருந்த 80 டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஆறு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2024 – 2025 ம் கல்வியாண்டுக்கான இளநிலை மாணவா் சோ்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை (ஜூன் 24) முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது இந்த கலந்தாய்வில் மாணவ , மாணவிகள் காலை 9 மணிக்குள் வரவேண்டும் அனைத்து பாடப் பிரிவினரும் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் கலைவாணி தெரிவித்துள்ளார்.
செங்கம் புதூர் மாரியம்மன் கோயிலில் நீக்கிய சிகை சேகரிப்பு உரிமம் ஏலம் வரும் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஆய்வாளர் முன்னிலையில் திருவண்ணாமலை, காந்திநகர், இணை ஆணையர் அலுவலகத்தில் நிபந்தனைகளுடன் நடைபெறவுள்ளது. விவரங்களுக்கு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கேட்டுப் பெறலாம்.
Sorry, no posts matched your criteria.