India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் பொதுப்பணித்துறை அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு வை
சந்தித்து, நீதிமன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி
செய்து தர கோரிக்கை இன்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு வழக்கறிஞர்களின் கோரிக்கையை
நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடியை ஊக்கப்படுத்தவும் பயிர் வளர்ச்சிக்கு அனைத்து சத்துக்களும் பெற்று விவசாயம் செய்யவும் மண்புழு உரங்கள் மற்றும் தென்னங்கன்றுகள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதை தி.மலை அரசு கலைக் கல்லூரி எதிரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்காவிற்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் அன்பரசு நேற்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்கான குறைதீர்வு கூட்டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று தெரிவித்துள்ளார்.
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமுடன் இணைந்து இனி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, மாற்று திறனாளி அட்டைகள் பெறுதல், புதுப்பித்தல் செய்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல்,4 புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாமென ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் நெல் பயிருக்கு டிஏபி, யூரியா, பொட்டாஷ் உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். டிஏபி உர பயன்பாட்டினை குறைத்து அதே அளவு ஊட்டச்சத்தினை தரக்கூடிய சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தினால் அதிக அளவில் மகசூல் பெறலாம். 50 கிலோ டிஏபி உரத்தில் 9 கிலோ தழைச்சத்து மற்றும் 23 கிலோ மணிச்சத்து உள்ளது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உமாபதி தெரிவித்துள்ளார்.
திரு அண்ணாமலையார் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் ஆலயத்தில் ஆடி முதல் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் , பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தொடர்பான கூட்டம் இன்று ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மலை, இந்தியன் ரெட் கிராஸ் சங்கம், மாவட்ட கிளை அசாதாரண அவசர வருடாந்திர கூட்டம் ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சித் தலைவர் பாஸ்கரபாண்டியன்
தலைமையில் நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள் ஜூலை 27 தேதிக்குள் தங்களுடைய விவரங்களை 9443252187 வாட்ஸ்அப் எண் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டுமென ரெட் கிராஸ் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆடி பிறந்த நிலையில் தி.மலை மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் பணிகளை தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்ததால் 30 ஆயிரம் ஹெக்டேர் நெல் சாகுபடி தொடங்கிவிட்டது. 7.47 லட்சம் மெட்ரிக் டன் நெல், 48 ஆயிரம் மெட்ரிக் டன் பயிர் வகைகள், 79 ஆயிரம் மெட்ரிக் டன் சிறுதானியம் என மாவட்டத்தில் விளைச்சல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதில் திருவண்ணாமலை – செங்கம் பகுதியில் நான்கு வழி சாலை அமைக்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும், ஆரணி பகுதியில் பட்டு உற்பத்தி பூங்கா அமைக்கப்பட வேண்டும் போன்றவை மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இதில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?
Sorry, no posts matched your criteria.