Tiruvannamalai

News September 1, 2024

அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரபல நடிகை வருகை

image

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆண்ட்ரியா, தற்போது அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் மனுசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

News September 1, 2024

ஜவ்வாது மலை கோடை நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கல்

image

நம்மியம்பட்டு அருகே ஜவ்வாது மலை பகுதியில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு கோடை விழாவின் நிறைவு விழாவில் நேற்று பல்வேறு கலைநிகழ்ச்சிகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்ட மலைவாழ் மாணவ மாணவிகளுக்கு சான்றுகள் மற்றும் கோப்பைகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

News August 31, 2024

திருவண்ணாமலை திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம்

image

திருவண்ணாமலை நகரம் திருக்கோவிலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திரளான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News August 31, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்

image

ஒன்றிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 3ம் தேதி வெம்பாக்கம் ஒன்றியம் குத்தனூர், வரும் 4ம் தேதி செய்யாறு ஒன்றியம் வடுகப்பட்டு , வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர், அனக்காவூர் ஒன்றியம் எச்சூர், தெள்ளாறு , மேல்பாதி ஆகிய இடங்களில், வரும் 9ம் தேதி வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

News August 31, 2024

தி.மலையில் உள்ள வாக்குச்சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. செங்கம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 323, திருவண்ணாமலை தொகுதியில் 296, கீழ்பென்னாத்தூா் தொகுதியில் 285, கலசப்பாக்கம் தொகுதியில் 281, போளூா் தொகுதியில் 285, ஆரணி தொகுதியில் 311, செய்யாறு தொகுதியில் 311, வந்தவாசி (தனி) தொகுதியில் 280 என மொத்தம் 2,372 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன

News August 31, 2024

கண்ணமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

image

கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக கார்த்திக் என்பவர் பணியாற்றி வந்தார். மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்பில் இருப்பதாக வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு இவர் மீது பல்வேறு புகார்கள் மாவட்ட காவல்துறைக்கு சென்றுள்ளது. எனவே வேலூர் சரக டி.ஐ.ஜி. தேவராணி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் திருவண்ணாமலை மாவட்ட போலீசார் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News August 30, 2024

போளூரில் சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழு ஆய்வு

image

சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பொது கணக்குக் குழுத் உறுப்பினர்கள் போளூரில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணி, பள்ளிகள் ஆகிய இடங்களில் கள ஆய்வில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசுத் துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, செலவினம், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப் பணிகள் குறித்த ஆய்வு செய்தனர்.

News August 30, 2024

குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

image

தி.மலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள் 3 மதிப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுபடுத்துதல் ஆகிய கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 30, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,372 வாக்குச்சாவடிகள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை நேற்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். மொத்தம் 2,372 வாக்குச்சாவடிகள் அடங்கும் பட்டியல் அரசியல் கட்சித் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. செங்கம் தொகுதியில் 323, திருவண்ணாமலை தொகுதியில் 296 உள்ளிட்ட தொகுதிகளின் வாக்குச்சாவடிகள் பட்டியல் இதில் வெளியிடப்பட்டன.

News August 29, 2024

தி.மலை: விளையாட்டு வீராங்கனைகளே தயாராகுங்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை திருவண்ணாமலை வட்ட அளவிலான பெண்களுக்கான கையுந்து பந்து , மேசைப் பந்து, ஹாக்கி ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சார்ந்த மாணவிகள் மட்டும் பங்கு பெறலாம். இதில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!