India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக மகப்பேறு, குழந்தை இறப்பு தணிக்கை மற்றும் சுகாதார ஆய்வுக் கூட்டம் இன்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாமினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் இன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.பழனி தலைமையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜ் உடன் இருந்தார்.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரசு துணி நூல் துறை, திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தென்னிந்திய பயிற்சி ஆராய்ச்சி சங்கம் மூலமாக 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இலவசமாக ஸ்பின்னிங், தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு https//tntextiles.tn.gov.in/jobs என்ற இணையதளத்தில் பதிவிடலாம். மேலும், மண்டல துணை இயக்குனர், ஜவுளித்துறை, குகை, சேலம்-6 முகவரியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாமென ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 77 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் ஆன்மீக பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில்
இருந்து நேரடி தினசரி விரைவு ரயில் சேவை திருவண்ணாமலைக்கு கொண்டு வரவும், இதன் மூலம் ஆன்மீக பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் பொருட்டும் சுற்றுலா தலத்தின் மூலம் வருமானம் பெருகும் என்பதை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று(ஜூலை 24) திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 801 மாணவ மாணவிகள் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, தி.மலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.பழனி அவர்கள் மேற்பார்வையில், இன்று பிரம்மதேசம் காவல் நிலைய காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வின்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராமத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இந்து சமய அறநிலைத்துறை இணை இயக்குனர் அலுவலக கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.