India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசு சார்பாக கல்வித்துறையில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு திருவண்ணாமலை அடி அண்ணாமலை அரசு உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் லட்சுமி காந்தன் 2023 ஆம் ஆண்டிற்கான விருதை பெற்றுள்ளார். அவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் சால்வை அணிவித்து மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்கள் பாராட்டி வருகின்றனர்.
வந்தவாசி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலியானது. வந்தவாசி அருகே கயநல்லூரில் 2 வயது ரித்திக் என்ற குழந்தை வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தது. அப்போது, ரித்திக்கை காணவில்லை என்பதால் பெற்றோர் தேடியுள்ளார். அப்போது, அருகில் உள்ள தொட்டியில் மூழ்கிக் கிடப்பதை கண்டனர். குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை விளக்கிடும் வகையில் 156 பக்கங்களுடன் Tiruvannamalai The shrine of Eternal Fire என்ற காட்சி கையேட்டினை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இதில், கோவில் தலவரவாறு, தீபத்திருவிழா, மூலிகை ஓவியங்கள், சிற்பங்கள், அருணகிரிநாதரின் வாழ்க்கை குறிப்புகள், சேஷாத்திரி சுவாமிகள், திருவண்ணாமலை திருக்கோவிலின் விழாக்கள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் 9988576666 என்ற எண்ணில் இருந்த இடத்தில் இருந்தே தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம். எந்த வகையான சட்ட விரோத செயல்களைப் பற்றி தெரிவிக்கவும் இந்த எண்ணில் தொடர்புகொள்ளலாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி பார்வையில் புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள்ளாக தீர்வு காணப்படும் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக கண்டறியப்பட்ட நீர்நிலைகள் திருவண்ணாமலை தாமரைக் குளம், சிங்காரப்பேட்டை ஏரி பச்சையம்மன் கோயில் குளம், செங்கம் கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி குளம், பூமா செட்டி குளம் போளூர் ஏரி, கூர் ஏரி ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் விநாயக சதுர்த்தி – 2024 விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
திருவண்ணாமலை நகரத்தில் காவல் ஆய்வாளர் அன்பரசு தலைமையில் இன்று (05.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு காவல் ரோந்து பணிக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு (9498154799) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக மழை பெய்யக்கூடும்.
திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் புதிய சுங்க சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை கரியமங்கலம், விழுப்புரம் நங்கிளிக்கொண்டான், கிருஷ்ணகிரி நாகம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் சுங்கச்சாவடி அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் ஊர்வலத்துக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.