India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 77 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் ஆன்மீக பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில்
இருந்து நேரடி தினசரி விரைவு ரயில் சேவை திருவண்ணாமலைக்கு கொண்டு வரவும், இதன் மூலம் ஆன்மீக பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் பொருட்டும் சுற்றுலா தலத்தின் மூலம் வருமானம் பெருகும் என்பதை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று(ஜூலை 24) திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 801 மாணவ மாணவிகள் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, தி.மலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.பழனி அவர்கள் மேற்பார்வையில், இன்று பிரம்மதேசம் காவல் நிலைய காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வின்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராமத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இந்து சமய அறநிலைத்துறை இணை இயக்குனர் அலுவலக கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் உத்தரவின் படி, குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R.சௌந்தரராஜன் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று(ஜூலை 24) நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் பொதுப்பணித்துறை அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு வை
சந்தித்து, நீதிமன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி
செய்து தர கோரிக்கை இன்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு வழக்கறிஞர்களின் கோரிக்கையை
நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடியை ஊக்கப்படுத்தவும் பயிர் வளர்ச்சிக்கு அனைத்து சத்துக்களும் பெற்று விவசாயம் செய்யவும் மண்புழு உரங்கள் மற்றும் தென்னங்கன்றுகள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதை தி.மலை அரசு கலைக் கல்லூரி எதிரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்காவிற்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் அன்பரசு நேற்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்கான குறைதீர்வு கூட்டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று தெரிவித்துள்ளார்.
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமுடன் இணைந்து இனி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, மாற்று திறனாளி அட்டைகள் பெறுதல், புதுப்பித்தல் செய்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல்,4 புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாமென ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.