India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வருகிற 30ஆம் தேதி அறிவியல் முறையில் வெள்ளாடு வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும் என்ற தகவலை ஆராய்ச்சி மையத் தலைவர் அருளானந்தம் நேற்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் 5 இடங்களில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் ஊரகப் பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 2 ஆயிரத்து 485 மனுக்களும், நகர்புறங்களில் நடைபெற்ற முகாம்களில் 968 மனுக்கள் என மொத்தமாக 3 ஆயிரத்து 453 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவண்ணாமலை ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில், ஆடி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. காணிக்கை உண்டியலில் பக்தர்கள் சுமார் ரூ.3.46 கோடி பணம் , தங்கம் 305 கிராம் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை சுற்றியுள்ள குளங்களை அளவீடு செய்தல் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், சாணானந்தல் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி இன்று துவக்கி வைத்தார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக மகப்பேறு, குழந்தை இறப்பு தணிக்கை மற்றும் சுகாதார ஆய்வுக் கூட்டம் இன்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாமினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் இன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.பழனி தலைமையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜ் உடன் இருந்தார்.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரசு துணி நூல் துறை, திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தென்னிந்திய பயிற்சி ஆராய்ச்சி சங்கம் மூலமாக 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இலவசமாக ஸ்பின்னிங், தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு https//tntextiles.tn.gov.in/jobs என்ற இணையதளத்தில் பதிவிடலாம். மேலும், மண்டல துணை இயக்குனர், ஜவுளித்துறை, குகை, சேலம்-6 முகவரியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாமென ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.