India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தி.மலை மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ibps.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை(ஜன.31) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை, தென்னரசம்பட்டு, வேங்கிக்கால், வள்ளிவாகை, ஊம்சாம்பாடி, கிளியாப்பட்டு, துர்க்கை நம்மியந்தல், சானானந்தல், வட ஆண்டாபட்டு, குண்ணியந்தல், வட அரசம்பட்டு, நொச்சிமலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். (SHARE IT)

தி.மலை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

தி.மலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்ட அளவில் கையுந்து பந்து, தடகளம், கபடி, கயிறு இழுத்தல் ஓவியப்போட்டி மற்றும் கேரம் ஆகிய போட்டிகள் இன்றும், ஸ்ட்ரீட் கிரிக்கெட், எறிபந்து, கோலம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகள் நாளையும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

பிரசித்திபெற்ற தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்ளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், ரூ.5 கோடியே 45 லட்சத்து 29 ஆயிரத்து 806-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 190 கிராம் தங்கம், 2 கிலோ 390 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தின் TN 21 G0793 (Bolero Lx) அரசு வாகனம் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அரசு வழிகாட்டு மதிப்பு ரூ.1 லட்சம். 04.02.2026 காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏலம் நடைபெறும். ஏலத்தில் பங்கேற்க ரூ.5,000 முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார், பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மோனிகா (27). கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மோனிகாவின் தம்பி மேகநாதன் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜன.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.