Tiruvannamalai

News February 1, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜன.31) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 31, 2026

தி.மலை: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

தி.மலை: ரயில்வேயில் 22195 காலியிடங்கள்; APPLY!

image

தி.மலை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News January 31, 2026

தி.மலையில் பார்க்கவேண்டிய முக்கிய கோயில்

image

▶ அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை
▶ ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு
▶ பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்
▶ எந்திர சனீஸ்வரர் கோயில், ஏரிக்குப்பம்
▶ வேதபுரிஸ்வர்ர் திருக்கோயில், செய்யாறு
▶ பர்வதமலை
▶ மாமண்டூர் குடைவரைக்கோயில்
▶ சீயமங்கலம், குடைவரைக்கோயில்
▶ தடாகபுரிஸ்வரர் ஆலயம், மடம்
விடுமுறையில் சிற்றுலா செல்ல முக்கிய இடங்களான இவற்றை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 31, 2026

தி.மலை: கரண்ட் கட்? Whatsappல் தீர்வு!

image

தி.மலை மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 31, 2026

தி.மலை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

தி.மலையில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News January 31, 2026

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்; வந்தது அறிவிப்பு!

image

தி.மலையில் பிப். 1 ஞாயிற்றுக்கிழமை காலை 6.13 மணிக்கு பௌர்ணமி தொடங்கி, 2ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நிறைவடைகிறது. கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரத்திலிருந்து முன்பதிவில்லா 8 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கத்தில் 12.40 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். ஷேர் பண்ணுங்க.

News January 31, 2026

தி.மலை: இன்று முதல் திறக்க உத்தரவு!

image

தி.மலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று முதல் மே.11 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் வலது, இடதுபுற கால்வாய்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 550 கனஅடி என மொத்தம் 5952 மில்லியன் கனஅடி நீர் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாய பெருமக்கள் பயனடைவர்.

News January 31, 2026

தி.மலை: ஒரே இரவில் அடுத்தடுத்து கொள்ளை!

image

ஆரணி, மாமண்டூர் கிராமத்தில் நேற்று முன்தினம் ஒரே இரவில் அடுத்தடுத்து 7 வீடுகளில் மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். பீரோக்களை உடைத்து தாலிச் செயின், கம்பல் என 10 சவரன் தங்க ஆபரணங்கள், கால் கொலுசு காப்பு என 200 கிராம் வெள்ளி மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

News January 30, 2026

தி.மலை: தமிழ் தெரிந்தால் போதும், வங்கியில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!