Tiruvannamalai

News August 4, 2024

திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் மாற்றம்

image

திருவண்ணாமலை நகராட்சி ஆணையராக இருந்த தட்சிணாமூர்த்தி திருவேற்காடு நகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் கடலூர் மாநகராட்சி ஆணையராக இருந்த காந்தி ராஜன் புதிய மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ள திருவண்ணாமலைக்கு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார் என நகராட்சி நிர்வாகத் துறை செயலர் டி.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

திருவண்ணாமலையில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

image

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணிபுரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

News August 3, 2024

45 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 45 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி சரோஜ்குமார் தாகூர் இன்று (ஆகஸ்ட் 3) உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் பெற்ற காவல் ஆய்வாளர்கள் விரைவில் அவர்களுக்கு மாற்றப்பட்ட காவல் நிலையத்தில் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

News August 3, 2024

ஆரணியில் 10 சவரன் தங்க நகை கொள்ளை

image

ஆரணி அருகே மருசூரில் சாந்தகுமார், சந்திரா வயதான தம்பதியரை 2 முகமூடி திருடர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் தாக்கிவிட்டு சந்திரா கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க செயின், 50,000 ரூபாய் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் 3 வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் 2 தனிப்படை போலீசார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரணி மக்களே கவனமாக இருங்கள்.

News August 3, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 3, 2024

ஜவ்வாது மலையின் பழைய பெயர் தெரியுமா?

image

ஜவ்வாது மலை என்பது கிழக்குத் தொடர்ச்சி மலையில் வரும் மலைத்தொடர் ஆகும். பத்துப்பாட்டின் பத்தாவது பாட்டான மலைபடுகடாம் பாடலில் குறிப்பிடப்படும் நன்னன் சேய் நன்னன் என்ற மன்னன் இம்மலையை ஆண்டதாக குறிப்பிடப்படுகிறது. மலைபடுகடாம் இம்மலையை விவரிக்கையில் மழூ வளமும், மூங்கில் செழித்தது நவிர மலை என்று கூறுகிறது. புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள நடுகற்களில் நவிர மலை என்ற பெயரே உள்ளது.

News August 3, 2024

திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைக்கு மழை வர வாய்ப்புள்ளதா என கமென்ட் செய்யுங்கள்.

News August 3, 2024

தி.மலை பழங்குடியின இளைஞர்களுக்கு அறிவிப்பு

image

தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வில் பங்கேற்கவுள்ள பழங்குடியின இளைஞர்களுக்கு வரும் 10-ஆம் தேதி இணைய வழியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இந்த பயிற்சியில் திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்கலாம்.

News August 3, 2024

கீழ்க்கொடுங்காலூரில் நெசவாளா்களுக்கு மருத்துவ முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட கைத்தறித்துறை சாா்பில், ஆகஸ்ட் 6ஆம் தேதி வந்தவாசி, கீழ்க்கொடுங்காலூா் பகுதிகளில் நெசவாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், நெசவாளா்கள், அவா்களது குடும்பத்தினா் பங்கேற்கலாம். மேலும், ஆகஸ்ட் 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்று பிற்பகலில் நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

News August 2, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!