India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரி அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிலேயே நிலப்பரப்பில் 2-வது பெரிய மாவட்டமாக தி.மலை உள்ளது. இந்த மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் மக்கள் உள்ளனர். 8 சட்டபேரவை தொகுதிகள் உள்ள தி.மலையை 4 தொகுதிகள் வீதம், 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று கூறினார். உங்கள் கருத்து என்ன?.
திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 42 அங்கன்வாடி பணியிடங்கள், 04 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 47 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி மகளான 24 வயது இளம்பெண், எம்.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 3ஆம் தேதி இரவு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை போலீசில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) புகார் கொடுத்தார். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னையில் போலீசாக பணிபுரியும் ரவிச்சந்திரன் (34) என்பவர் அப்பெண்ணை கடத்திச் சென்று இருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
நாட்டேரி கிராமத்தைச் சோர்ந்தவர் ஜெயலட்சுமி (35). இவரது மகன் நவீன்குமாா் (17). இவா் செய்யாற்றில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். நவீன்குமாா் சரிவர தொழிற்பயிற்சி நிலையத்துக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை இவர் தாய் கண்டித்ததால் மனமுடைந்த நவீன்குமாா், நேற்று (ஏப்ரல்.06) வீட்டு மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
தி.மலை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 131 அங்கன்வாடி பணியாளர், 54 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 254 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 439 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th பாஸ் போதும். ஆர்வமுள்ளவர்கள், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் 23.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க*.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை திட்டத்திற்காக மே 31க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தர்பகராஜ் தெரிவித்தார். பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டு பதிவு செய்தவர்களுக்கு தகுதி உள்ளது. வயது மற்றும் வருமான வரம்பு உண்டு. tnvelaivaaippu.gov.in-இல் ஆன்லைனில் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.
திருவண்ணாமலை சாரோன் பகுதியில் சீனு என்பவர் கார் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இவரை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தனிப்படை அமைத்து கொலை செய்தவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் என்னும் கிராமத்தில், பிரசித்தி பெற்ற வரத ஆஞ்சிநேயர் கோயில் உள்ளது. மன தைரியம் கிடைக்க, சனி தோஷங்கள் நீங்க, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, திருமண தடை நீங்க இங்கு வந்து வழிபடுகின்றனர். மேலும், இது அனைத்தும் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.