Tiruvannamalai

News August 26, 2024

ஆரணியில் 1000 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

image

ஆரணியில் அரிமா சங்கம் சாா்பில் 1000 மாணவிகள் பங்கேற்ற பரத நாட்டிய சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் இந்த பரத நாட்டிய சாதனை நிகழ்ச்சியில் ஆரணி, திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம், விழுப்புரம் பதிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்றனா். இதில் பஞ்ச பூதங்கள், தண்ணீா் தூய்மை செய்தல், பஞ்சாக்ர நிருத்தியாஞ்சலி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News August 26, 2024

ஆரணியில் 1000 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

image

இன்று ஆரணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட நாட்டிய பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 1 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியபடி உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இந்நிகழ்வில் பரதநாட்டிய ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

News August 26, 2024

தி.மலையில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி

image

திருவண்ணாமலையில் உள்ள ஈசான்ய மைதானத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி இன்று நடைபெற்றது. டாக்டர் எ.வ.வே கம்பன் பாக்சிங் அகாடமி நடத்தும் இந்தப் போட்டி அகடமி தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதை மாநில தடகள சங்கதுணை தலைவர் கம்பன் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் அகாடமி செயலாளர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News August 25, 2024

தி.மலையை சேர்ந்த தலைமை ஆசிரியைக்கு விருது 

image

செங்கம் அடுத்த குயிலம் ஊராட்சி ராஜாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் வி.கலைவாணி தலைமை ஆசிரியையின் சேவையை பாராட்டி, அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை வழங்கும் அறம் விருதுகள்-2024 நல்லாசிரியர் விருதினை அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை நிறுவனர் நல்லமணி தலைமையில் சென்னை நாரத கான சபா அரங்கில் நீதியின் குரல் நிறுவனர் முனைவர் பாஸ்கரன், திரைப்பட நடிகர் சதீஷ் நேற்று வழங்கினார்கள்.

News August 25, 2024

மாவட்ட அளவிலான கேரம் போட்டி துவக்கம்

image

கீழ் அணைக்கரை எஸ் முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட கேரம் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான கேரம் போட்டியை தமிழ்நாடு கேரம் சங்க துணைத் தலைவர் சீனி கார்த்திகேயன் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தினார். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

News August 25, 2024

வெம்பாக்கத்தில் அம்மன் கற்சிலை கண்டெடுப்பு

image

தி.மலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த மாத்தூர் கிராமத்தில் கிராம மயானத்துக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது 2 அடி உயரமுள்ள அம்மன் கற்சிலை, பித்தளை உடைவாள் கிடைத்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கலா, வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், வட்டாட்சியர் துளசிராமன், ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமி பாபு ஆகியோர் சிலையை கிராம ஊராட்சி பொதுக் கட்டடத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

News August 25, 2024

திருவண்ணாமலையைச் சேர்ந்த 10 பேர் திருப்பதியில் கைது

image

திருப்பதியில் தடை செய்யப்பட்டுள்ள வனப்பகுதியில் நுழைந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த 10 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிடிப்பட்டவர்களிடம் இருந்து பிடி இல்லாத 7 கோடாரிகள், கார், பைக் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். செம்மரம் வெட்ட வனப்பகுதிக்கு வந்தார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 24, 2024

தி.மலை அருகே விபத்தில் ஓட்டுநர் மரணம்; 30 பேர் காயம்

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெங்கட்ராயன்பேட்டையில் இன்று தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பக்கம் நொறுங்கியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News August 24, 2024

தி.மலை அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் சோஷியல் பவுண்டேஷன் சார்பாக தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.27 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், துணை இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 24, 2024

தி.மலையில் இன்று பள்ளி வேலை நாள் ரத்து

image

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் மாதத்தின் 2 மற்றும் 4ஆவது சனிக்கிழமை வேலைநாள் ரத்து செய்து முதன்மை கல்வி அலுவலர் கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டார். 2024 -25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமை பள்ளி வேளை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வேலை நாள் அண்மையில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று தி.மலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!