India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒன்றிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 3ம் தேதி வெம்பாக்கம் ஒன்றியம் குத்தனூர், வரும் 4ம் தேதி செய்யாறு ஒன்றியம் வடுகப்பட்டு , வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர், அனக்காவூர் ஒன்றியம் எச்சூர், தெள்ளாறு , மேல்பாதி ஆகிய இடங்களில், வரும் 9ம் தேதி வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. செங்கம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 323, திருவண்ணாமலை தொகுதியில் 296, கீழ்பென்னாத்தூா் தொகுதியில் 285, கலசப்பாக்கம் தொகுதியில் 281, போளூா் தொகுதியில் 285, ஆரணி தொகுதியில் 311, செய்யாறு தொகுதியில் 311, வந்தவாசி (தனி) தொகுதியில் 280 என மொத்தம் 2,372 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன
கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக கார்த்திக் என்பவர் பணியாற்றி வந்தார். மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்பில் இருப்பதாக வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு இவர் மீது பல்வேறு புகார்கள் மாவட்ட காவல்துறைக்கு சென்றுள்ளது. எனவே வேலூர் சரக டி.ஐ.ஜி. தேவராணி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் திருவண்ணாமலை மாவட்ட போலீசார் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பொது கணக்குக் குழுத் உறுப்பினர்கள் போளூரில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணி, பள்ளிகள் ஆகிய இடங்களில் கள ஆய்வில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசுத் துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, செலவினம், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப் பணிகள் குறித்த ஆய்வு செய்தனர்.
தி.மலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள் 3 மதிப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுபடுத்துதல் ஆகிய கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை நேற்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். மொத்தம் 2,372 வாக்குச்சாவடிகள் அடங்கும் பட்டியல் அரசியல் கட்சித் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. செங்கம் தொகுதியில் 323, திருவண்ணாமலை தொகுதியில் 296 உள்ளிட்ட தொகுதிகளின் வாக்குச்சாவடிகள் பட்டியல் இதில் வெளியிடப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை திருவண்ணாமலை வட்ட அளவிலான பெண்களுக்கான கையுந்து பந்து , மேசைப் பந்து, ஹாக்கி ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சார்ந்த மாணவிகள் மட்டும் பங்கு பெறலாம். இதில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் மேல்செங்கம், மேல்பள்ளிப்பட்டு, குப்புசாமி நகர், சந்தாநகர் , கிருஷ்ணா நகர் மேல்செங்கம் புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமார் 4.20 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை தெள்ளார் அடுத்த மேல்பாதி கிராமத்தில் வி.பி.ஆர்.சி கட்டிடத்திலும் செப்.3ஆம் தேதி வெம்பாக்கம் அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில், 4ஆம் தேதி வந்தவாசி அடுத்த ஓசூர் நாராயணா திருமண மண்டபத்தில், 5ஆம் தேதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்.4-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பி. மதுசூதனன் வெளியிட்ட செய்தி குறிப்பில், துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர், உதவி ஆலோசகர், அலுவலக உதவியாளர், எழுத்தர் போன்ற பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.