India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான மகளிருக்கான வாள் விளையாட்டுப் போட்டியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று (22.09.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ( 7 மணி வரை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வருமா?.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சரண்ராஜ், ராஜேஷ், மணி ஆகியோர் பலியாகினர். விபத்தில் உயிரிந்த இளைஞர்கள் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. பின்னர் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 44 தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இவற்றில் 550-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட 8,607 பேரை தோ்வு செய்து பணி ஆணைகள் வழங்கி உள்ளனா் என்றாா்.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் நேற்று முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலையில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான எரிவாயு உருளை நுகர்வோர் மாதாந்திர குறை தீர்வு நாள் கூட்டம் வருகின்ற 26.09.2024 அன்று காலை 11.00 மணிக்கு தி.மலை வட்டாட்சியர் அலுவலக பின்புறம் உள்ள கூட்ட அரங்கில் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயனடையுமாறு என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் & தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தி.மலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி-பையூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு அரசு மதுபான கடையில் மது பாட்டில்களை விற்பனை செய்த ரூ.3.70 லட்சத்தை எடுத்துச் சென்ற புருஷோத்தமன் என்ற ஊழியரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து தாக்கியுள்ளனர். பின்னர் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அவர் பலத்த காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த வந்தவாசி வெண் குன்றம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞருக்கும், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பொன்மணி என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து பொன்மணி வீட்டை விட்டு வெளியேறி காதலனை வந்தவாசியில் கரம் பிடித்துள்ளார். இந்தநிலையில், காதலர்கள் நேற்று வந்தவாசி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவண்ணாமலையில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.